ஆப்நகரம்

ராகுலா? ஷிகர் தவனா? நாளை ரோஹித்துடன் யார் ஓப்பனிங்... கோலி சொன்ன ரகசியம்!

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ரோஹித் ஷர்மாவுடன் ராகுல், ஷிகர் தவன் இருவரில் யார் துவக்க வீரராக களமிறங்குவது என இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 13 Jan 2020, 6:02 pm
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதன் முதல் போட்டி நாளை மும்பையில் துவங்குகிறது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். போட்டிக்கு முன்பாக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி செய்தியாளர்களை சந்தித்தார்.
Samayam Tamil KL Rahul


மூன்றாவது வீரர்
இந்திய கிரிக்கெட் அணியின் துவக்க வீரராக ஷிகர் தவன் காயத்தில் இருந்து மீண்டு வந்து, இலங்கை அணிக்கு எதிரான டி-20 போட்டியில் விளையாடினார். இத்தொடரில் ஓரளவு தவன் சிறப்பான ஆட்டத்தையே வெளிப்படுத்தினார். இந்நிலையில் தற்போதைய ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் தவன், ராகுல், ரோஹித் ஷர்மா என மூன்று துவக்க வீரர்கள் இடம் பெற்றுள்ளதால், யாரை ஓரங்கட்டுவது என்ற கேள்வி எழுந்தது.

கோலி திட்டம்
இந்நிலையில் இருவருடனே இந்திய அணி நாளை களமிறங்குமா? அல்லது இடது கை பேட்ஸ்மேன் என்பதால் ராகுலுக்கு பதிலாக தவனுக்கு முன்னுரிமை அளிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது. இதற்கு பதில் அளித்த இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி கூறுகையில், “ ஒரு வீரர் சிறந்த பார்மில் உள்ளது அணிக்கு மிகவும் மகிழ்ச்சியான விஷயம். இதனால், எது சிறந்த கூட்டணியை தேர்வு செய்ய உதவும்.

மூவருக்கும் வாய்ப்பு
என்னைப் பொறுத்தவரையில் ரோஹித், தவன், ராகுல் என அனைவருக்கும் வாய்ப்பு விளையாட வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் களத்தில் எப்படி வெளிப்பாடு உள்ளது என்பதை சோதிக்க உதவும். என்னைப் பொறுத்தவரையில் எந்த ஒரு இடத்தில் பேட்டிங் செய்தாலும் எனக்கு எவ்வித சிக்கலும் இல்லை. கேப்டனாக எனது முக்கியமான வேலையே எதிர்கால அணியை உருவாக்குவதும் தான்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்