ஆப்நகரம்

ஆசியகோப்பை டி20 - இலங்கையை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது இந்திய பெண்கள் அணி

பெண்களுக்கான ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய பெண்கள் அணி இலங்கை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

Samayam Tamil 7 Jun 2018, 4:19 pm
கோலாலம்பூர் : பெண்களுக்கான ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய பெண்கள் அணி இலங்கை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
Samayam Tamil anuja patil.


மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் பெண்களுக்கான ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி நடைப்பெறுகிறது. இதில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம், தாய்லாந்து, மலேசியா ஆகிய 6 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.

இதில் இன்று நடைப்பெற்ற போட்டியில் இந்திய - இலங்கை அணிகள் இன்று விளையாடின. இதில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.

இலங்கை அணியின் யசோதா மெண்டிஸ் 27, ஹாசினி பெரேரா 46 ரன்கள் எடுத்தனர். மற்ற வீராங்கனைகள் சொர்ப்ப ரன்களில் விக்கெட்டை இழந்தானர். இதனால் 20 ஓவரில் 7 விக்கெட் இழந்து 107 ரன்கள் எடுத்தது.

தொடர்ந்து விளையாடிய இந்திய அணிக்கு மிதலி ராஜ் 23, மந்தனா 12, ஹர்மன்பிரீத் கவுர் 24 ரன்கள் எடுத்தனர். வேதா கிருஷ்ண மூர்த்தி 29, அனுஜா படில் 19 ரன் எடுத்து அவுட்டாகாமல் களத்தில் இருந்தனர்.
18.5 ஓவரில் இந்திய அணி 3 விக்கெட் இழந்து 110 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியாவின் அனுஜா படில் பவுலிங்கில் 4 ஓவர் வீசி 19 ரன் கொடுத்து ஒரு விக்கெட்டும், பேட்டிங்கில் 19 ரன் எடுத்தார். இதனால் அனுஜாவுக்கு ஆட்ட நாயகி விருது வழங்கப்பட்டது.

இந்திய அணி 4 போட்டிகளில் விளையாட் 3ல் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்