ஆப்நகரம்

INDW vs IREW: ‘திக் திக் போட்டி’...ஷாக் கொடுத்த அயர்லாந்து: இந்தியா த்ரில் வெற்றி...அரையிறுதியில் ஆப்பு உறுதி?

அயர்லாந்து மகளிர் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய மகளிர் அணி த்ரில் வெற்றியைப் பெற்றது.

Authored byமதுரை சமயன் | Samayam Tamil 21 Feb 2023, 6:50 am
மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர் தென்னாப்பிரிக்காவில் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், இந்திய அணியின் அரையிறுதியை தீர்மானிக்கும் இந்தியா, அயர்லாந்து இடையிலான ஆட்டம் நடைபெற்று முடிந்துள்ளது.
Samayam Tamil இந்திய மகளிர் அணி


இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

இந்திய மகளிர் இன்னிங்ஸ்:

முதலில் களமிறங்கிய இந்திய மகளிர் அணியில் ஓபனர் ஸ்மிருதி மந்தனா அபாரமாக செயல்பட்டு 56 பந்துகளில் 9 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் உட்பட 87 ரன்களை குவித்து அசத்தினார்.

இதனைத் தொடர்ந்து ஷபாலி வர்மா 24 (29), ரோட்ரிகஸ் 19 (12) ஆகியோர் ஓரளவுக்கு ரன்களை சேர்த்தார்கள். இதனால், இந்திய மகளிர் அணி 20 ஓவர்கள் முடிவில் 155/6 ரன்களை குவித்தது.

அயர்லாந்து இன்னிங்ஸ்:

இலக்கை துரத்திக் களமிறங்கிய அயர்லாந்து அணியில் ஓபனர் அமி ஹன்டர் 1 (1) முதல் பந்திலேயே ரன்அவுட் ஆகி வெளியேறினார். இதனைத் தொடர்ந்து அதே முதல் ஓவரில் ப்ரன்டர்ஹஸ்ட் 0 (4) ரேனுகா சிங் பந்தில் போல்ட் ஆனார்.

அடுத்து கேபி லிவிஸ் 32 (25), லூரா டெனாலி 17 (20) ஆகியோர் சிறப்பாக விளையாடி வந்தார்கள். அப்போது, அயர்லாந்து அணி 8.2 ஓவர்களில் 54/2 ரன்களை சேர்த்திருந்தபோது, மழை குறுக்கிட்டது. மழை நிற்கவே இல்லை. DLS விதிமுறைப்படி அயர்லாந்து அணி 5 ரன்கள் பின்தங்கியிருந்தது. இதனால், இந்திய மகளிர் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

அரையிறுதியில் பிரச்சினை:

குரூப் பி பிரிவில் இங்கிலாந்து அணி முதலிடமும், இந்திய அணி இரண்டாவது இடமும் பிடிப்பது கிட்டதட்ட உறுதியாகிவிட்டது. குரூப் ஏ பிரிவில் ஆஸ்திரேலிய அணி முதலிடத்தை உறுதி செய்துவிட்டது.

இதனால், இந்திய மகளிர் அணி அரையிறுதியில் ஆஸ்திரேலிய மகளிர் அணியை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய மகளிர் அணியை வீழ்த்துவது அவ்வளவு சாதாரணம் கிடையாது. அதுவும், வேகத்திற்கு சாதகமான தென்னாப்பிரிக்க மண்ணில் அவர்கள்தான் ஆதிக்கம் செலுத்துவார்கள் என்பதால், இந்திய மகளிர் அணி வெற்றிக்காக கடுமையாக போராட வேண்டியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
எழுத்தாளர் பற்றி
மதுரை சமயன்
நான் மதுரை சமயன். பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால், கடந்த 3 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு. தற்போது, Times Of India சமயம் தமிழில் Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்