ஆப்நகரம்

WTC Final: '2 முறை தவறு செய்த கம்மின்ஸ்'...ஆஸிக்கு கடும் பின்னடைவு: டாப் கியரில் இந்திய அணி..முன்னேற்றம்!

பாட் கம்மின்ஸ் செய்த 2 தவறுகளால் ஆஸ்திரேலிய அணிக்கு கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

Authored byமதுரை சமயன் | Samayam Tamil 9 Jun 2023, 5:13 pm
டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் இந்தியா, ஆஸ்திரேலியா ஆகிய ஆகிய அணிகள் மோதி வருகின்றன. முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, முதல் இன்னிங்ஸில் 469/10 ரன்களை சேர்த்தது.
Samayam Tamil பாட் கம்மின்ஸ்


இந்திய இன்னிங்ஸ்:

இதனைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸ் களமிறங்கியுள்ள இந்திய அணியில் முதல் 4 பேட்டர்களில் யாருமே 20 ரன்களை கூட தொடவில்லை. ரோஹித் ஷர்மா 15 (26), ஷுப்மன் கில் 13 (15), சேத்தேஸ்வர் புஜாரா 14 (25), விராட் கோலி 14 (31) ஆகியோர் படுமோசமாக சொதப்பி ஆட்டமிழந்தார்கள்.

இதனைத் தொடர்ந்து, ரவீந்திர ஜடேஜா ஓரளவுக்கு அதிரடியாக விளையாடி 48 (51) ரன்களை எடுத்தார். அடுத்து, அஜிங்கிய ரஹானே 29 (71) மற்றும் கேஎஸ் பரத் 5 (14) ஆகியோர் களத்தில் இருந்தபோது, இரண்டாவது நாள் முடிவுக்கு வந்தது.

மூன்றாவது நாள்:

இதனைத் தொடர்ந்து மூன்றாவது நாளின், இரண்டாவது பந்திலேயே கேஎஸ் பரத்தை 5 (15) போலந்த் போல்ட் ஆக்கினார். அடுத்து ரஹானே, ஷர்தூல் தாகூர் ஆகியோர் விளையாடி வருகிறார்கள். ஆஸ்திரேலிய அணியினர் தொடர்ந்து ஷார்ட் பால்களை வீசி வந்த நிலையில், அதனை எதிர்கொண்டபோது ஷர்தூல் தாகூரின் வலது கையில் இரண்டுமுறை பட்டது. வலியால் துடித்த ஷர்தூலை அணியிம் மருத்துவர் உடனே வந்து பார்த்தார். அதன்பிறகு, ஸ்ப்ரே அடிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து ஷர்தூல் தாகூர் சிறப்பாக விளையாட ஆரம்பித்தார். இவரும், ரஹானேவும் சிலமுறை ஸ்லிப் கேட்ச் கொடுத்த நிலையில், அதனை பீல்டர்கள் பிடிக்க தவறினர். இதனைத் தொடர்ந்து, 2ஆவது செஷனின் இறுதியில், ஷர்தூல் தாகூருக்கு எதிராக பாட் கம்மின்ஸ் LBW விக்கெட்டை எடுத்தார். இருப்பினும், அது நோபால் என அறிவிக்கப்பட்டது. இதற்குமுன், ரஹானேவுக்கு எதிராகவும் இதேபோல் கம்மின்ஸ் LBW விக்கெட் எடுத்த நிலையில், அதுவும் நோபால் ஆனது.

இப்படி இரண்டு முறை நோபால் வீசியதால், ஆஸ்திரேலிய அணிக்கு பின்னடைவு ஏற்படும் உருவாகியுள்ளது. ஆம், ரஹானே 89 (122), ஷர்தூல் தாகூர் 36 (83) ஆகியோர் சிறப்பாக விளையாடி வருகிறார்கள். இந்திய அணி 260/6 ரன்களை எடுத்து, 209 ரன்கள் மட்டும்தான் பின்தங்கியுள்ளது.
எழுத்தாளர் பற்றி
மதுரை சமயன்
நான் மதுரை சமயன். பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால், கடந்த 3 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு. தற்போது, Times Of India சமயம் தமிழில் Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்