ஆப்நகரம்

WTC Final: 'ஆஸி 196 ரன்கள் முன்னிலை'... கேப்டன்ஸியில் சொதப்பும் ரோஹித்: இதை செஞ்சே ஆகணும்ங்க!

ஆஸ்திரேலிய அணி சிறப்பான நிலையை எட்டி வருகிறது.

Authored byமதுரை சமயன் | Samayam Tamil 9 Jun 2023, 8:01 pm
டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் இந்தியா, ஆஸ்திரேலியா ஆகிய ஆகிய அணிகள் மோதி வருகின்றன. முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, முதல் இன்னிங்ஸில் 469/10 ரன்களை சேர்த்தது.
Samayam Tamil ஆஸ்திரேலிய அணி


இந்திய இன்னிங்ஸ்:

இதனைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸ் களமிறங்கியுள்ள இந்திய அணியில் முதல் 4 பேட்டர்களில் யாருமே 20 ரன்களை கூட தொடவில்லை. ரோஹித் ஷர்மா 15 (26), ஷுப்மன் கில் 13 (15), சேத்தேஸ்வர் புஜாரா 14 (25), விராட் கோலி 14 (31) ஆகியோர் படுமோசமாக சொதப்பி ஆட்டமிழந்தார்கள்.

இதனைத் தொடர்ந்து, ரவீந்திர ஜடேஜா ஓரளவுக்கு அதிரடியாக விளையாடி 48 (51) ரன்களை எடுத்தார். அடுத்து, அஜிங்கிய ரஹானே 29 (71) மற்றும் கேஎஸ் பரத் 5 (14) ஆகியோர் களத்தில் இருந்தபோது, இரண்டாவது நாள் முடிவுக்கு வந்தது.

மூன்றாவது நாள்:


இதனைத் தொடர்ந்து மூன்றாவது நாளின், இரண்டாவது பந்திலேயே கேஎஸ் பரத்தை 5 (15) போலந்த் போல்ட் ஆக்கினார். அடுத்து, ரஹானே ஷர்தூல் தாகூர் இருவரும் தொடர்ந்து அதிரடியாக விளையாடி ரன்களை குவிக்க ஆரம்பித்தார்கள். இதனால், ஆஸ்திரேலிய அணிக்கு பின்னடைவு ஏற்பட ஆரம்பித்தது. இந்நிலையில், ரஹானே 89 (129) மற்றும் ஷர்தூல் தாகூர் 51 (109) இருவரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஷாக் கொடுத்தனர்.

அடுத்து டெய்ல் என்டர்ஸ் நிலைத்து நின்று விளையாடவில்லை. உமேஷ் யாதவ் 5 (11), முகமது ஷமி 13 (11) இருவரும் வந்த வேகத்தில் நடையைப் கட்டினார்கள். இதனால், இந்திய அணி 296/10 ரன்களுக்கு சுருண்டது.

ஆஸ்திரேலிய இன்னிங்ஸ்:

இதனைத் தொடர்ந்து, 173 ரன்கள் முன்னிலை பெற்ற ஆஸ்திரேலிய அணி, இரண்டாவது இன்னிங்ஸ் விளையாடி வருகிறது. இதுவரை, ஆஸ்திரேலிய அணி 23/1 ரன்களை எடுத்துள்ளது. வார்னர் 1 (8) ஆட்டமிழந்துள்ளார். கவாஜா 13 (32), லபுஷேன் 8 (26) இருவரும் களத்தில் இருக்கிறார்கள். மூன்றாவது நாள், இரண்டாவது செஷன் முடிவுக்கு வந்துள்ளது.

ரோஹித் செய்யும் தவறு:

ஆஸ்திரேலிய அணி பேட்டர்கள் தொடர்ந்து கிரீஸை விட்டு வெளியே நின்று விளையாடுகிறார்கள். இதனால், LBW ஆக்க முடியவில்லை. மேலும், இதன்மூலம் ஸ்விங்கையும் கட் செய்து விளையாடுகிறார்கள். இதனை தடுக்க, கேஎஸ் பரத்தை க்ளோஸ் ஸ்டெம்ஸில் நிற்க வைக்க வேண்டும். அப்போது பவுன்சர் போட முடியாது. லெந்த் பாலை மட்டும்தான் போட முடியும். இருப்பினும், இதன்மூலம், ஆஸி பேட்டர்களுக்கு அழுத்தங்களை ஏற்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
எழுத்தாளர் பற்றி
மதுரை சமயன்
நான் மதுரை சமயன். பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால், கடந்த 3 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு. தற்போது, Times Of India சமயம் தமிழில் Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்