ஆப்நகரம்

தரங்கா தலையெழுத்தை மாற்றிய ‘பேட்’: வீணாக விக்கெட்டை இழந்த சோகம்!

இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்டில், எல்லைக்கோட்டை எட்டிய போது இலங்கை வீரர் தரங்கா பரிதாபமாக விக்கெட்டை பறிகொடுத்தார்.

TOI Sports 27 Jul 2017, 6:01 pm
காலே: இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்டில், எல்லைக்கோட்டை எட்டிய போது இலங்கை வீரர் தரங்கா பரிதாபமாக விக்கெட்டை பறிகொடுத்தார்.
Samayam Tamil wutharanga run out in unlucky manner
தரங்கா தலையெழுத்தை மாற்றிய ‘பேட்’: வீணாக விக்கெட்டை இழந்த சோகம்!


இலங்கை சென்றுள்ள இந்திய அணி, முதலில் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி காலேவில் நடக்கிறது.இந்திய அணி முதல் இன்னிங்சில் 600 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில், இலங்கை அணி, முதல் இன்னிங்சில், 5 விக்கெட்டுக்கு 154 ரன்கள் எடுத்து 446 ரன்கள் பின் தங்கியுள்ளது. இப்போட்டியில் இந்திய சுழற்பந்துவீச்சாளர் அஷ்வின் வீசிய பந்தை கிரீசுக்கு வெளியே வந்து இலங்கை வீரர் தரங்கா அடிக்க முயன்றார்.

ஆனால் பந்து அவரது காலில் பட்டு, நேராக அபினவ் கைக்கு சென்றது. உடனே சுதாரித்த அபினவ், பந்தை கீப்பர் சகாவிடம் வீசினார். சகாவும் பெயில்ஸை பதம் பார்க்க, களத்தில் இருந்த அம்பயர் மூன்றாவது அம்பயரிடம் முடிவு கேட்டார். ரீப்ளேவில், தரங்கா எல்லைக்கோட்டை எட்டிய போதும் அவரது பேட் அந்தரத்தில் இருந்தது தெரியவந்தது.


இதனால் அதிர்ஷ்டமில்லாமல், பரிதாபமாக விக்கெட்டை இழந்து தரங்கா வெளியேறினார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்