ஆப்நகரம்

இங்கிலாந்தை சும்மா ஓடவிட்டு அடித்த இந்தியா : 35ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

இங்கிலாந்து அணிக்கு எதிரான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

TOI Sports 24 Jun 2017, 10:02 pm
டெர்பி : இங்கிலாந்து அணிக்கு எதிரான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
Samayam Tamil wwc17 india won by 35 runs against england
இங்கிலாந்தை சும்மா ஓடவிட்டு அடித்த இந்தியா : 35ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி


இந்தியாவின் சிறப்பான பேட்டிங் :
டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங் செய்ய தீர்மானித்தது. தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவின் பூனம் ரவுட் 86 (134), ஸ்மிரிதி மந்தனா 90 (72), மிதாலி ராஜ் 71 (73), ஹர்மன்பிரீத் கவுர் 24 (22) ரன்கள் குவிக்க, இந்தியா 3 விக்கெட் இழப்பிற்கு 281 ரன்களை சேர்த்தது.

தடுமாறிய இங்கிலாந்து:
இந்தியாவின் பவுலிங்கை சமாளித்து விளையாடிய இங்கிலாந்து அணி, சீரான இடைவெளியில், விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

இங்கிலாந்தின் கேப்டன் ஹீத்தர் நைட் 46, ஃப்ரான் வில்சன் 81 ரன்களை எடுத்தனர். கடைசி வரை வெற்றி வாய்ப்புடன் விளையாடி வந்த இங்கிலாந்து அணிக்கு தேவையில்லாத ரன் எடுக்கும் முயற்சியால் 4 விக்கெட்டுகளை ரன் அவுட் முறையில் இழந்து வெற்றி வாய்ப்பை பறிகொடுத்தது.

இந்தியாவின் தீப்தி சர்மா 3, ஷிகா பாண்டே 2, பூனம் யாதவ் 1 விக்கெட் எடுத்தனர்.
72 பந்தில் 90 ரன்களை குவித்த ஸ்மிரிதி மந்தனாவுக்கு ஆட்ட நாயகி விருது வழங்கப்பட்டது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்