ஆப்நகரம்

இன்னும் இரண்டு நாளில் ‘சென்னை சூப்பர் கிங்ஸ் பேக்’: ரசிகர்கள் உற்சாகம்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இரண்டு ஆண்டு தடைக்காலத்து முடிவதால், ரசிகர்கள் கொண்டாட்ட துவங்கியுள்ளனர்.

TOI Sports 12 Jul 2017, 6:38 pm
சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இரண்டு ஆண்டு தடைக்காலத்து முடிவதால், ரசிகர்கள் கொண்டாட்ட துவங்கியுள்ளனர்.
Samayam Tamil yeah on 15th july 2015 iplscam lodha panel suspends csk franchises for two years
இன்னும் இரண்டு நாளில் ‘சென்னை சூப்பர் கிங்ஸ் பேக்’: ரசிகர்கள் உற்சாகம்!


இந்தியாவில் ஆண்டுதோறும் உள்ளூர் டி-20 கிரிக்கெட் தொடரான இந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்) நடக்கிறது. கடந்த 2013ல் நடந்த இத்தொடரில் சூதாட்டம் நடந்தது தெரியவந்தது.

இதையடுத்து இந்திய கிரிக்கெட் போர்டு (பிசிசிஐ) நடத்திய விசாரணையில், சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் சூதாட்டத்தில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இரு அணிகளும் கடந்த 2015 ஜூலை 14ல் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்பதில் இருந்து 2 ஆண்டு தடை விதிக்கப்பட்டது.

இந்த தடைக்காலம் இன்னும் இரண்டு நாட்களில் முடிவுக்கு வருகிறது. இந்நிலையில், தடைக்கு பின் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்கும் படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு, விரைவில் அழைப்பு விடுக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே போல ராஜஸ்தான் அணிக்கும் அழைப்பு விடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அந்த அணியை வட-இந்தியாவின் வேறு ஒரு நிறுவனம் கைப்பற்ற வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வழக்கம் போல ‘தல’ தோனி தலைமையில் களமிறங்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்