ஆப்நகரம்

’தில்லுன்னா’ தில்லு உங்களுக்கு அப்பிடி ஒரு ’தில்லு’ சார்...: ’தல’ தோனி பாராட்டிய ஆள் யார் தெரியுமா!

‘பாகிஸ்தானில் இலங்கை வீரர்களை காப்பாற்றிய பஸ் டிரைவர் மெஹர் முகமது காலீல்லை முன்னாள் இந்திய கேப்டன் தோனி பாராட்டிய விஷயம் தற்போது தெரியவந்துள்ளது.

TOI Sports 17 Oct 2017, 3:33 pm
புதுடெல்லி: ‘பாகிஸ்தானில் இலங்கை வீரர்களை காப்பாற்றிய பஸ் டிரைவர் மெஹர் முகமது காலீல்லை முன்னாள் இந்திய கேப்டன் தோனி பாராட்டிய விஷயம் தற்போது தெரியவந்துள்ளது.
Samayam Tamil you are so brave words of ms dhoni for khaleel who saved sri lanka team in 2009
’தில்லுன்னா’ தில்லு உங்களுக்கு அப்பிடி ஒரு ’தில்லு’ சார்...: ’தல’ தோனி பாராட்டிய ஆள் யார் தெரியுமா!


கடந்த 2009ல் பாகிஸ்தான் சென்ற இலங்கை அணி மீது தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இதன் பின் இன்றுவரை கிரிக்கெட் அரங்கில் முன்னணி அணிகள் எதுவும் பாகிஸ்தான் அணிக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள முன்வரவில்லை.

இந்நிலையில், சுமார் 8 ஆண்டுகளுக்கு பின் இலங்கை அணி, லாகூரில் நடக்கவுள்ள டி-20 போட்டியில் பங்கேற்கவுள்ளது. இந்த அணியை வரவேற்க அப்போதைய இலங்கை அணியை காப்பாற்றி தாயகத்துக்கு வழி அனுப்பி வைத்த பஸ் டிரைவர் காலீல் காத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து காலீல் கூறுகையில்,’ அந்த தாக்குதலுக்கு பின் தென் ஆப்ரிக்கா சென்ற போது இந்திய முன்னாள் கேப்டன் தோனியை பார்த்தேன். அப்போது அவர் தாக்குதல் சம்பவத்திற்காக என்னை பாராட்டினார். உண்மையிலேயே நீங்க தில்லான ஆள் என்றார். அதற்கு, அவர்கள் எனது சகோதரர்கள் அவர்களை காப்பாற்ற என உயிரையும் கொடுத்திருப்பேன்.’ என்றார்.

இதுமட்டுமல்லாமல், பாகிஸ்தான் சென்ற ஜிம்பாப்வே அணி (2015), சமீபத்தில் நடந்த உலக லெவன், பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டிகளுக்கு வெளிநாட்டு வீரர்களை பத்திரமாக அழைத்து சென்றதும் இந்த காலீல் தான்.

The former Indian captain MS Dhoni had hailed the bravery of Meher Muhammad Khaleel for saving the Sri Lankan players during the terror attack in 2009. Khaleel was driving their team bus to Gaddafi Stadium when they were attacked by the militants. But he didn’t perturb and safely drove them to the destination after which the players left the country soon. But the incident changed the life of Khaleel completely and the world, especially the people of Sri Lanka and Pakistan hailed him as the hero.

அடுத்த செய்தி

டிரெண்டிங்