ஆப்நகரம்

யுவராஜ் என்னைக் கண்டுகொள்ளவில்லை: அண்ணன் மனைவி புகார்

இந்தியக் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் மீது அவரதுஅண்ணன் மனைவி போலீஸில் புகார் அளித்துள்ளார்.

Times Now 18 Oct 2017, 2:36 pm
இந்தியக் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் மீது அவரதுஅண்ணன் மனைவி போலீஸில் புகார் அளித்துள்ளார்.
Samayam Tamil yuvraj singh booked in domestic violence case
யுவராஜ் என்னைக் கண்டுகொள்ளவில்லை: அண்ணன் மனைவி புகார்


இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் அண்ணன் ஜோராவர் சிங். இவரது மனைவி அகன்க்ஷா ஷர்மா. இவர் தனது கணவர் ஜோராவர் மீதும் அவரது சகோதரரான யுவராஜ், யுவராஜின் தாய் ஷப்னம் சிங் ஆகியோர் மீது இன்று போலீசில் புகார் கொடுத்தார்.

குருகிராம் போலீசில் அகன்க்ஷா ஷர்மா அளித்த புகாரில், தான் குடும்ப வன்முறைக்கு ஆளானதாக குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அகன்க்ஷா வழக்கறிஞர் ஸ்வாதி சிங் கூறுகையில், "குடும்ப வன்முறை என்பது உடல் ரீதியானது மட்டுமல்ல. பணம் கேட்டு மிரட்டுவது, மனரீதியாக துன்புறுத்துவது போன்றவையும் குடும்ப வன்முறைதான். யுவராஜ் சிங்கின் தாய் ஷப்னம் மற்றும் அண்ணன் ஜோராவர் ஆகியோர் அகன்க்ஷாவுக்கு கொடுத்த நெருக்கடிகளை ஆதரிக்கும் வகையில் யுவராஜ் வேடிக்கை பார்த்திருக்கிறார்’ என்றார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்