ஆப்நகரம்

மிகவும் கம்மியான விலையில் ஏலத்துக்கு ரெடியான யுவராஜ் சிங்

மோசமான ஆட்டத்தால் கிரிக்கெட் உலகிலிருந்து மாயமான யுவராஜ் சிங் ஐபிஎல் ஏலத்தில் மிகவும் குறைவான விலையில் எந்த அணியிலாவது இடம் கிடைக்குமா எனக் காத்திருக்கிறார்.

Samayam Tamil 5 Dec 2018, 8:18 pm
ஐபிஎல் வீரர்கள் ஏலம் டிசம்பர் 18, 2018 அன்று நடைபெறுகிறது. இதில் வெளிநாடுகளைச் சேர்ந்த 232 வீரர்கள் உட்பட 1003 பேர் பங்கேற்கின்றனர். 70 மொத்தம் வீரர்களுக்கு மட்டுமே இடம் இருக்கும் நிலையில் இந்த ஏலத்தில் கடுமையான போட்டி நிலவுகிறது.
Samayam Tamil post_image_3b65922


இதனிடையே, கடந்த ஐபிஎல் தொடரில் சொதப்பியதால் அணி நிர்வாகத்தால் கழற்றிவிடப்பட்ட வீரர்கள் எப்படியாவது குறைந்த விலையிலாவது ஏதாவது ஓர் அணியில் ஒட்டிக்கொள்ளும் ஆர்வத்தில் உள்ளனர்.

இந்நிலையில், இந்திய அணி நட்சத்திர வீரராகத் திகழ்ந்து தற்போது இருக்கும் இடம்தெரியாமல் போய்விட்ட யுவராஜ் சிங் மீண்டும் ஐபிஎல் தொடரில் தலைகாட்ட முயல்கிறார்.
இதற்காக மிகக் குறைந்த விலையாக ஒரு கோடி ரூபாய் அடிப்படை விலையுடன் ஏலத்துக்குத் தயாராக உள்ளார். இவரைப் போலவே இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது சமி, சுழற்பந்துவீச்சாளர் அக்ஸர் படேல் ஆகியோர் ஒரு கோடி ரூபாய் அடிப்படை விலையுடன் காத்திருக்கின்றனர்.

ஏலத்தில் பங்கேற்கும் இந்திய வீரர்களில் அதிகபட்ச அடிப்படை விலையுடன் காத்திருப்பவர் ஜயதேவ் உனத்கண்ட். இவர் கடந்த முறை அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்ட இந்திய வீரராக இருந்தவர். ஆனால், தொடரில் படுமோசமாக பந்துவீசியதால் அணி நிர்வாகம் அவருக்கு குட்பை சொல்லிவிட்டது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்