ஆப்நகரம்

யுவராஜ் கடவுள் கொடுத்த பரிசு!: சந்தீப் பாட்டீல்

யுவராஜ் சிங் இந்திய கிரிக்கெட் அணிக்கு கடவுள் அளித்த பரிசு என்று முன்னாள் தேர்வுக்குழுத் தலைவர் சந்தீப் பாட்டீல் தெரிவித்துள்ளார்.

TOI Sports 16 Sep 2017, 6:07 pm
யுவராஜ் சிங் இந்திய கிரிக்கெட் அணிக்கு கடவுள் அளித்த பரிசு என்று முன்னாள் தேர்வுக்குழுத் தலைவர் சந்தீப் பாட்டீல் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil yuvraj singh is gods gift to indian cricket sandeep patil
யுவராஜ் கடவுள் கொடுத்த பரிசு!: சந்தீப் பாட்டீல்


இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி வீரர் யுவராஜ் சிங் கடைசியாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற ஜூன் மாதம் நடைபெற்ற ஒருநாள் தொடரில் விளையாடினார். அதற்குப் பிறகு, இலங்கை தொடரிலும் தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரிலும் அவர் ஓரங்கட்டப்பட்டுள்ளார்.

இந்நிலையில், யுவராஜ் சிங் இந்திய அணிக்கு கடவுள் கொடுத்த பரிசு என்று முன்னாள் தேர்வுக்குழுத் தலைவர் சந்தீப் பாட்டீல் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

மூத்த வீரர்கள் அணியில் இடம்பெறுவதற்கு அவர்களது உடல்தகுதியையும் ஆட்டத்திறனையுமே பார்க்க வேண்டும் என்று கூறிய அவர், “நான் யுவராஜ் சிங்கிற்கு மிகப்பெரிய ரசிகன். எப்போதும் அவரது தீவிர ரசிகனாகவே இருப்பேன். ஆனால், அவர் தன் உடல் தகுதியை நிரூபிக்க வேண்டும். பின் ரன்களைக் குவிக்க வேண்டும்” என்றும் தெரிவித்தார்.



இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்ற மூன்று தொடர்களிலும் இந்திய அணி முழுமையாக வெற்றி பெற்றிருப்பது இந்திய அணியில் எம்.எஸ்.தோனியின் தாக்கம் இன்னும் தொடர்வதையே உறுதிசெய்கிறது சந்தீப் கூறியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்