ஆப்நகரம்

அவரு யார்க்கர் ‘கிங்’... அப்போ நீங்க யார்க்கர் ‘குயினா’: புள்ளிங்கோ சஹாலின் சேட்டை!

இந்தூர்: இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டி-20 போட்டியில் சிறப்பாக பவுலிங் செய்த நவ்தீப் சாய்னியை யார்க்கர் குயின் என சஹால் கேலி செய்துள்ளார்.

Samayam Tamil 8 Jan 2020, 5:13 pm
இந்தியா வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி, 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் பங்கேற்கிறது. இதன் முதல் போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. இரு அணிகள் மோதிய இரண்டாவது டி-20 போட்டி இந்தூரில் நடந்தது. இதில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Samayam Tamil Yuzvendra Chahal-  Navdeep saini


பவுலர்களும் காரணம்
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது. இந்நிலையில் இரண்டாவது டி-20 போட்டியில், இந்திய பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செயல்பட்டாலும், பவுலர்களும் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணம் எனலாம். இதில் அசத்தலாக பவுலிங் செய்த இந்திய அணிக்கு சார்துல் தாகூர் 3 விக்கெட்டும், நவ்தீப் சாய்னி 2 விக்கெட்டும் சாய்த்தனர்.

யார்க்கர் குயின்
இந்நிலையில் போட்டி முடிந்த பின் அந்த போட்டியில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களை இந்திய வீரர் யுஸ்வேந்திர சஹால், தனது சஹால் டிவிக்காக பேட்டி எடுப்பதை வழக்கமாக வைத்துள்ளார். இதன்படி நேற்றைய போட்டியில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களான சார்துல் தாகூர், நவ்தீப் சாய்னி ஆகியோரை போட்டி எடுத்தார்.


அப்போது சஹால், “ஜஸ்பிரீத் பும்ரா யார்க்கர் கிங் ஆனதால், அதனால் நீங்கள் யார்க்கர் குயினா?” என வேடிக்கையாக நக்கலடித்தார். இதைக்கேட்ட சாய்னி, சார்துல் தாகூர் ஆகியோர் சிரித்தனர். சஹாலின் இந்த காமெடி வீடியோவை பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. இந்த வீடியோவை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்