ஆப்நகரம்

எங்களுக்கும் கடன் கொடுங்க... தள்ளாடும் ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியம்

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டித் தொடரை உள்ளூரில் நடத்த போதுமான நிதி இல்லை என்பதால் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐசிசி) கடன் கேற்க முடிவெடுத்துள்ளது.

Samayam Tamil 20 Feb 2018, 10:07 pm
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டித் தொடரை உள்ளூரில் நடத்த போதுமான நிதி இல்லை என்பதால் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐசிசி) கடன் கேற்க முடிவெடுத்துள்ளது.
Samayam Tamil zimbabwe cricket board approaches icc for loan
எங்களுக்கும் கடன் கொடுங்க... தள்ளாடும் ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியம்


பொதுவாக ஒரு நிறுவனம் புதிய தொழில் தொடங்க, தொழில் விருத்தி செய்ய வங்கிகளில் கடன் பெறுவது வழக்கம். அதே போன்று பல்வேறு நாடுகள் வறுமையால் உலக வங்கியில் கடன் கேட்பதும் அறிந்திருப்போம்.

அந்த வகையில் ஜிம்பாப்வே அணி கிரிக்கெட் வாரியம் போதிய நிதி இல்லாததால் தங்கள் நாட்டில் கிரிக்கெட் தொடரைக் கூட நடத்த முடியாத நிலையில் தத்தளிக்கின்றது.
இந்த நிதிப் பற்றாக்குறையை போக்க, ஜிம்பாப்வே - பாகிஸ்தான் அணிக்கு இடையே முன்னதாக திட்டமிடப்பட்ட போட்டி திட்டமிட்ட படி ஜிம்பாப்வேயில் நடத்த ஐசிசி.,யிடம் கடன் கேற்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஜிம்பாப்வே அணி வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வாரிய ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தத்தளித்துக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்