ஆப்நகரம்

Ind vs Pak: ‘பிரதமருடன் பேசினோம்’ அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்…கேப்டன் பேட்டி!

பிரதமர் அனுபவங்களை பகிர்ந்துகொண்டார் என பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் கூறியுள்ளார்.

Samayam Tamil 24 Oct 2021, 9:31 am
டி20 உலகக் கோப்பைக்கான முதல் சுற்று கடந்த 17ஆம் தேதிமுதல் துவங்கி நடைபெற்று வந்தது. இலங்கை, வங்கதேசம், ஓமன் போன்ற மொத்தம் எட்டு அணிகள் இரு குழுக்களாக பிரிந்து இதில் பங்கேற்றன. நேற்றுமுன்தினம் இரவுடன் இந்த முதல் சுற்று நிறைவடைந்த நிலையில் குரூப் ஏ பிரிவில் இலங்கை, நமீபியா அணிகளும் குரூப் பி பிரிவில் ஸ்காட்லாந்து, வங்கதேசம் அணிகளும் முதல் இரண்டு இடங்களை பிடித்து சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறியுள்ளன. நேற்று முதல் சூப்பர் 12 சுற்றுகள் நடந்து வருகிறது.
Samayam Tamil பாபர் அசாம், விராட் கோலி


இந்தியா பயிற்சி ஆட்டம்:

இந்த உலகக் கோப்பை தொடருக்காக இந்தியா இரண்டு பயிற்சி ஆட்டங்களில் பங்கேற்று விளையாடியது. முதல் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு அபார வெற்றிபெற்ற இந்திய அணி, அடுத்து ஆஸ்திரேலிய அணியையும் வீழ்த்தி அதிரடி காட்டியது. பாகிஸ்தான் அணியும் பயிற்சி ஆட்டத்தில் ஓரளவுக்கு சிறப்பாக விளையாடியது. இதனால், இன்று இரவு 7:30 மணிக்கு துபாயில் துவங்கவுள்ள இந்தியா, பாகிஸ்தான் இடையிலான லீக் போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாபர் அசாம் பேட்டி:

இந்நிலையில், தற்போது பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டிகொடுத்துள்ள பாகிஸ்தான் அணிக் கேப்டன் பாபர் அசாம், நாங்கள் பிரதமருடன் பேசினோம். அவர் அனுபவங்களை பகிர்ந்துகொண்டார் எனக் கூறினார். “நாங்கள் அமீரகத்திற்கு கிளம்புவதற்கு முன்பு பிரதமர் இம்ரான் கானுடன் பேசினோம். 1992ஆம் ஆண்டில் அவர் தலைமையில் பாகிஸ்தான் உலகக் கோப்பை வென்றது குறித்து பகிர்ந்துகொண்டார். மேலும், அவருடைய அனுபவங்களை பகிர்ந்துகொண்டார்.

எதாவது அறிவுரை கூற விரும்புகிறீர்களாக என பாபர், பாகிஸ்தான் பிரதமரிடம் கேட்டபோது, “எப்போதும் பதற்றமில்லாமல் பொறுமையாக விளையாடுங்கள். அப்போதுதான் சிறப்பாக விளையாட முடியும். உங்கள் மீது எப்போதுமே நம்பிக்கை வைத்திருங்கள்” எனத் தெரிவித்திருக்கிறார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்