ஆப்நகரம்

T20 World Cup 2021: ‘4 பந்தில் 4 விக்கெட்’…பேட்ஸ்மேன்களை அலறவிட அயர்லாந்து பௌலர்!

நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் அயர்லாந்து பௌலர் 4 பந்துகளில் 4 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார்.

Samayam Tamil 18 Oct 2021, 5:16 pm
டி20 உலகக் கோப்பை தொடர் அக்டோபர் 17 (நேற்று) முதல் துவங்கி நடைபெற்று வருகிறது. இன்று நடைபெறும் வரும் போட்டியில் நெதர்லாந்து, அயர்லாந்து அணிகள் மோதி வருகின்றன. இதில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து களமிறங்கியது.
Samayam Tamil கார்டிஸ் சேம்பர்


நெதர்லாந்து இன்னிங்ஸ்:

மைதானம் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருக்கும் என கணிக்கப்பட்டிருந்ததால், ஸ்கோர் 180 வரை செல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்படி நடக்கவில்லை. அயர்லாந்து பௌலர்கள் துவக்கம் முதலே அதிரடியாக பந்துவீசி, நெதர்லாந்து பேட்ஸ்மேன்களை மிரட்டி வந்தனர்.

இதனால் பென் கூப்பர் 0 (1), ஒன்டவுன் வீரர் பாஸ் டி லீடி 7 (11) ஆகியோர் வந்த வேகத்தில் நடையைக் கட்டினர். இந்நிலையில் கர்டிஸ் சேம்பர் வீசிய 9 ஆவது ஓவரில் (9.2, 9.3, 9.4, 9.5) ஆகமர் மேன் 11 (16), டென் டோஸ்சேட் 0 (1), ஸ்காட் எட்வர்ட்ஸ் 0 (1), வான் டீர் மெர்வி 0 (1) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால், சேம்பர் 4 பந்துகளில் நான்கு விக்கெட்களை வீழ்த்தி மெகா சாதனையைப் படைத்தார். டி20 உலகக் கோப்பையில் லசித் மலிங்கா, ரஷித் கான் ஆகியோர் மட்டுமே இந்த சாதனையை படைத்திருந்தார்கள். இந்நிலையில், சேம்பர் இந்த வரிசையில் இணைந்துள்ளார்.

தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் ஓபனர் மேக்ஸ் ஓடோவ்ட் 51 (47) சிறப்பாக விளையாடி அரை சதம் கடந்து ஆட்டமிழந்தார். அடுத்து சீலர் 21 (29) தனது பங்கிற்கு ரன்களை சேர்த்தார். இந்த இருவரும் நிலைத்து நின்று விளையாடியதால்தான், நெதர்லாந்து 100 ரன்களை கடந்தது. இறுதியில் நெதர்லாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 105/8 ரன்கள் சேர்த்தது. அடுத்து, அயர்லாந்து அணி களமிறங்கி இலக்கை துரத்தும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்