ஆப்நகரம்

‘நான் இருக்கேன்’…முகமது ஷமிக்கு ஆதரவாக சச்சின்: நெகிழ்ச்சி ட்வீட்!

முகமது ஷமிக்கு எதிராக சிலர் கடும் விமர்சனங்களை முன் வைத்து வருகிறார்கள்.

Samayam Tamil 26 Oct 2021, 7:24 am
ஆடவர்களுக்கான 7ஆவது டி20 உலகக் கோப்பை போட்டி, சூப்பர் 14 சுற்றின் நான்காவது லீக் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
Samayam Tamil சச்சின் டெண்டுல்கர்


முதலில் களமிறங்கிய இந்திய அணியில் அதிகபட்சமாக கேப்டன் விராட் கோலி 57 (49) ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்து ரிஷப் பந்த் 39 (30) அடித்தார். ரோஹித் ஷர்மா (0), ராகுல் 3 (3), ஹார்திக் பாண்டியா (11) போன்றவர்கள் சிறப்பாக சோபிக்கவில்லை. இதனால், இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 151/7 ரன்கள் மட்டுமே அடித்தது.

இலக்கை துரத்திக் களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் ஓபனர்கள் முகமது ரிஸ்வான் 79 (55), பாபர் அசாம் 68 (52) ஆகியோர் சிறப்பாக விளையாடி 17.5ஆவது ஓவரில் பாகிஸ்தான் அணிக்கு (152/0) 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பெற்றுக்கொடுத்தார்கள். இந்திய பௌலர்களால் ஒரு இடத்தில் கூட நெருக்கடியை ஏற்படுத்த முடியவில்லை.

‘டான்’ டீமாக மாறிய ஆப்கானிஸ்தான்…அரண்டுபோய் நிற்கும் இந்தியா, பாகிஸ்தான் அணிகள்!

கடும் விமர்சனம்:

இந்நிலையில், இந்திய அணியின் தோல்விக்கு முழு காரணம் முகமது ஷமிதான் என பலர் குற்றம்சாட்டி வருகிறார்கள். நேற்று ஷமி வீசிய 18ஆவது ஓவரில் மட்டும் 17 ரன்கள் கசிந்தது. இதனால், அந்த ஓவரிலேயே பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றது. இருப்பினும், அதற்கு முன்பே இந்திய அணியின் தோல்வி உறுதியாகிவிட்டது. ஆனாலும்கூட, முகமது ஷமி ஒரு இஸ்லாமியர் என்பதால்தான் மோசமான பந்துவீச்சை வெளிப்படுத்தி, பாகிஸ்தானை வெற்றிபெற செய்தார் என பலரும் விஷமத்தனமாக கூறி வருகின்றனர்.

இதற்கு பிசிசிஐ மற்றும் இந்திய அணி வீரர்கள் யாரும் சிறு கண்டனம் கூட தெரிவிக்கவில்லை. இதுதான் தற்போது புயலை கிளப்பியுள்ளது.

அப்துல்லா கண்டனம்:

இந்நிலையில், முகமது ஷமிக்கு ஆதரவாக ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா சில கருத்துகளை ட்வீட் மூலம் பகிர்ந்தார். “பாகிஸ்தானுக்கு எதிரான இந்திய அணியில் விளையாடிய 11 பேரில் முகமது ஷமியும் ஒருவர். ஷமி மட்டும் தனி நபராக விளையாடவில்லை. உங்கள் சக வீரர் சமூக வலைத்தளங்களில் கடுமையாக தாக்கப்படும்போது, அறுவறுப்பாக ட்ரோல் செய்யப்படும்போது, அவருக்கு ஆதரவாக நிற்காமல், கறுப்பின மக்களுக்கு ஆதரவாக இந்திய அணியின்ர மைதானத்தில் முழங்கால் இட்டு, ஆதரவு தெரிவித்தது எந்த விதத்திலும் பொருட்படுத்த முடியாது” எனத் தெரிவித்தார்.

Breaking: ஐபிஎல் புதிய 2 அணிகள்...வாங்கியது யார் தெரியுமா? வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

சச்சின் ட்வீட்:

இதனைத் தொடர்ந்து ட்வீட் வெளியிட்டுள்ள சச்சின் டெண்டுல்கர், “இந்திய அணியை நாம் ஆதரிக்கிறோம் என்றால் இந்தியாவுக்காக விளையாடும் வீரர்களையும் நாம் ஆதரிக்க வேண்டும். முகமது ஷமி உலகத்தரமான பந்துவீச்சாளர். மற்ற வீரர்களை போலவே, அன்று ஷமிக்கு மோசமான நாளாக அமைந்துவிட்டது. நான் முகமது ஷமிக்கு பின்னாலும், இந்திய அணிக்கு பின்னாலும் நிற்கிறேன்” என பதிவிட்டுள்ளார். இந்த ட்வீட் வைரலாகி வரும் நிலையில், பலரும் ஷமிக்கு ஆதரவாக கருத்துகளை பகிர்ந்து வருகிறார்கள்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்