ஆப்நகரம்

Ind vs pak: ‘சர்ச்சை’ கேள்வியை கேட்ட பத்திரிகையாளர்…கடுப்பான கோலி: அதிரடி பதில்!

பத்திரிகையாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு விராட் கோலி அதிரடியாக பதிலளித்தார்.

Samayam Tamil 24 Oct 2021, 2:23 pm
டி20 உலகக் கோப்பைக்கான முதல் சுற்று கடந்த 17ஆம் தேதிமுதல் துவங்கி நடைபெற்று வந்தது. இலங்கை, வங்கதேசம், ஓமன் போன்ற மொத்தம் எட்டு அணிகள் இரு குழுக்களாக பிரிந்து இதில் பங்கேற்றன. நேற்று முன்தினம் இரவுடன் இந்த முதல் சுற்று நிறைவடைந்த நிலையில் குரூப் ஏ பிரிவில் இலங்கை, நமீபியா அணிகளும் குரூப் பி பிரிவில் ஸ்காட்லாந்து, வங்கதேசம் அணிகளும் முதல் இரண்டு இடங்களை பிடித்து சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறியுள்ளன. நேற்று முதல் சூப்பர் 12 சுற்றுகள் நடந்து வருகிறது.
Samayam Tamil விராட் கோலி


இந்தியா பயிற்சி ஆட்டம்:

இந்த உலகக் கோப்பை தொடருக்காக இந்தியா இரண்டு பயிற்சி ஆட்டங்களில் பங்கேற்று விளையாடியது. முதல் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு அபார வெற்றிபெற்ற இந்திய அணி, அடுத்து ஆஸ்திரேலிய அணியையும் வீழ்த்தி அதிரடி காட்டியது. பாகிஸ்தான் அணியும் பயிற்சி ஆட்டத்தில் ஓரளவுக்கு சிறப்பாக விளையாடியது. இதனால், இன்று இரவு 7:30 மணிக்கு துபாயில் துவங்கவுள்ள இந்தியா, பாகிஸ்தான் இடையிலான லீக் போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Ind vs Pak: ‘பிரதமருடன் பேசினோம்’ அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்…கேப்டன் பேட்டி!

கோலி பேட்டி:

இந்நிலையில், இப்போட்டி தொடர்பாக கேப்டன் விராட் கோலி பத்திரிகையாளர் சந்திப்பில் பேசினார். அப்போது ஒரு கேள்வி எழுப்பிய நிரூபர், ‘டி20 உலகக் கோப்பை முடிந்த உடன், இந்திய டி20 அணி கேப்டன் பதவியிலிருந்து விலகவுள்ளேன் எனக் கூறியிருந்தீர்கள். இதற்கு அணி நிர்வாகத்துடன் ஏற்பட மோதல்தான் காரணம் எனக் கூறப்படுகிறது. உண்மை தானா?’ எனக் கேட்டார்.

இந்த கேள்வியால் கடுப்பான கோலி, “கேப்டன் பதவியிலிருந்து விலகியதற்கு போதுமான விளக்கம் கொடுத்துவிட்டேன். என்னால் உங்கள் கேள்விக்கு பதில் சொல்ல முடியாது. விமர்சிப்பவர்கள் சில கருத்துகளை கூறுவார்கள். அதனை நான் பொருட்படுத்துவதே கிடையாது. இப்போது எனது சிந்தனையில் இருப்பது டி20 உலகக் கோப்பை தொடர் மட்டும்தான். அதுகுறித்து கேள்வி கேளுங்கள்” என அதிருப்தியுடன் பதிலளித்தார். இதனால், அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்