ஆப்நகரம்

SL vs BAN: உள்ள நிக்காத கிளம்பு...வம்பிழுத்த இலங்கை பௌலர்: பேட்டை ஓங்கிய வங்கதேச வீரர்! ‘வீடியோ’

இலங்கை பௌலர் செய்த செயல் கடும் கண்டனங்களை பெற்று வருகிறது.

Samayam Tamil 25 Oct 2021, 2:35 pm
கடந்த 2018ஆம் ஆண்டில் இலங்கையில் நடைபெற்ற நிதாஸ் டிராபி தொடரின்போது இலங்கை, வங்கதேசம் வீரர்களுக்கு இடையில் முட்டல் மோதல் இருந்தது வந்தது. அதன்பிறகு இரு நாட்டு ரசிகர்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் மோதிக்கொள்ள ஆரம்பித்தனர். இதனால் இந்தியா, பாகிஸ்தான் போட்டியைப் போலத்தான், வங்கதேசம் மற்றும் இலங்கை போட்டியை அந்நாட்டு ரசிகர்கள் பார்க்க துவங்கினர்.
Samayam Tamil லிடன் தாஸ், லஹிரு குமாரா


இந்நிலையில் தற்போது நடைபெற்று வரும் சூப்பர் 12 சுற்று லீக் போட்டியில் இலங்கை, வங்கதேசம் அணிகள் மோதின. அப்போது ஆட்டத்தின் நான்காவது ஓவரை இலங்கை பௌலர் லஹிரு குமாரா வீசிய நிலையில், ஸ்ட்ரைக்கில் இருந்த வங்கதேச பேட்ஸ்மேன் நயீம் நேராக குமாரா கைகளுக்கு பந்தை அடித்தார். அதனை உடனே கையில் எடுத்த குமாரா, நைம் தலையை நோக்கி ஆவேசமாக எறிந்தார். இந்த சம்பவம் அனைத்தும் சில நொடிக்குள் நடந்து முடிந்துவிட்டது. இதனைத் தொடர்ந்து நடுவர் குமாராவுக்கு வார்னிங் கொடுத்து அனுப்பி வைத்தனர்.



இதனைத் தொடர்ந்து குமாரா வீசிய 6ஆவது ஓவரில் லிடன் தாஸ் பந்தை தூக்கியடிக்க முற்பட்டு மிட் ஆஃப் திசையில் ஆட்டமிழந்தார். இதனைத் தொடர்ந்து குமாரா, லிடஸ் தாஸுடன் வார்த்தை போர் தொடுத்தார். ஏற்கனவே அவுட் ஆன விரக்தியில் இருந்த தாஸ், பேட்டை ஓங்கி ஷாக் கொடுத்தார். அதற்குள் வீரர்கள் வந்து சண்டையை தடுத்தனர்.

தொடர்ந்து நடைபெற்ற நைம் 62 (52) ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அடுத்து முஸ்தபிசுர் ரஹீம் 57 (37) அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார். இதனால், வங்கதேச அணி 20 ஓவர்கள் முடிவில் 171/4 ரன்கள் குவித்து அசத்தியது.

இலக்கை துரத்திக் களமிறங்கிய வங்கதேச அணியில் அசலங்கா 80 (49), ராஜபக்சே 53 (31) ஆகியோர் சிறப்பாக விளையாடியதால், இலங்கை அணி 18.5 ஓவர்கள் முடிவில் 172/5 ரன்கள் சேர்த்து 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்