டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றியைப் பெற்று கோப்பையை தட்டித்தூக்கியது.
டி20 உலகக் கோப்பை 2022 தொடர் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக டாஸ் இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
பாகிஸ்தான் இன்னிங்ஸ்:
முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் பாபர் அசாம் 32 (28), ஷான் மசூத் 38 (28), சதாப் கான் 20 (14) ஆகியோர் ஓரளவுக்கு பெரிய ஸ்கோர் அடித்தனர். அடுத்து முகமது ரிஸ்வானை 15 (14) தவிர்த்து யாரும் இரட்டை இலக்க ரன்களை அடிக்கவில்லை. இதனால், பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 137/8 ரன்களை மட்டுமே சேர்த்தது.
இங்கிலாந்து இன்னிங்ஸ்:
இலக்கை துரத்திக் களமிறங்கிய இங்கிலாந்து அணியில் ஓபனர் ஜாஸ் பட்லர் 26 (17), அலேக்ஸ் ஹேல்ஸ் 1 (1), பிலிப் சால்ட் 10 (9) ஆகியோர் பவர் பிளே ஓவர்களிலேயே ஆட்டமிழந்தனர். அடுத்து ஹேரி ப்ரூக்ஸ் 20 (23), மொயின் அலி 19 (13) ஆகியோர் பென் ஸ்டோக்ஸுடன் 52 (49) பார்ட்னர்ஷிப் அமைத்ததால் இங்கிலாந்து அணி 19 ஓவர்களில் 138/5 ரன்களை சேர்த்து, 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்று கோப்பையை தட்டித்தூக்கியது.
அப்ரீதிக்கு காயம்:
இப்போட்டியில் சிறப்பாக பந்துவீசக் கொண்டிருந்த ஷாஹீன் அப்ரீதிக்கு, பீல்டிங் செய்துகொண்டிருந்தபோது காலில் காயம் ஏற்பட்டது. பெவிலியன் திரும்பினார். மீண்டும் பெவிலியன் திரும்பிய அப்ரீதிக்கு காயத்தின் பாதிப்பு இருந்துகொண்டேதான் இருந்தது. இதனால், அப்ரீதி 16.1ஆவது பந்தை மட்டும் வீசிவிட்ட பெவிலியன் திரும்பினார். இதனால், அப்ரீதி தனது கடைசி இரண்டு ஓவர் கோட்டாவில் பந்துவீசவில்லை.
பாபர் அசாம் பேட்டி:
இப்போட்டி முடிந்தப் பிறகு பேசிய பாபர் அசாம், ‘‘சாம்பியன் பட்டம் வென்ற இங்கிலாந்து அணிக்கு வாழ்த்துக்கள். அவர்கள் தகுதியான அணிதான். இன்றைய போட்டியில் சிறப்பாக விளையாடினார்கள். நாங்கள் 20 ரன்கள் வரை குறைவாக அடித்தது தோல்விக்கு முக்கிய காரணம். அதுமட்டுமல்ல, ஷாஹீன் அப்ரீதி தனது கடைசி இரண்டு ஓவர்களை வீசாததும் பெரும் பின்னடைவாக இருந்தது. அப்ரீதிக்கு காயம் ஏற்படாமல் இருந்ததிருந்தால் முடிவில் மாற்றம் இருந்திருக்கும். விளையாட்டில் இது இயல்பான ஒன்று"
"நாங்கள் இத்தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் தோற்று, அடுத்து சிறப்பான கம்பேக் கொடுத்து இறுதிப் போட்டிவரை முன்னேறினோம். பௌலர்கள் தொடர்ந்து அபாரமாக செயல்பட்டு வந்தார்கள். உலகின் சிறந்த பௌலிங் அட்டாக் எங்களிடம் இருக்கிறது. தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் ரசிகர்களுக்கு நன்றி’’ எனக் கூறினார்.
டி20 உலகக் கோப்பை 2022 தொடர் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக டாஸ் இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
பாகிஸ்தான் இன்னிங்ஸ்:
முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் பாபர் அசாம் 32 (28), ஷான் மசூத் 38 (28), சதாப் கான் 20 (14) ஆகியோர் ஓரளவுக்கு பெரிய ஸ்கோர் அடித்தனர். அடுத்து முகமது ரிஸ்வானை 15 (14) தவிர்த்து யாரும் இரட்டை இலக்க ரன்களை அடிக்கவில்லை. இதனால், பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 137/8 ரன்களை மட்டுமே சேர்த்தது.
இங்கிலாந்து இன்னிங்ஸ்:
இலக்கை துரத்திக் களமிறங்கிய இங்கிலாந்து அணியில் ஓபனர் ஜாஸ் பட்லர் 26 (17), அலேக்ஸ் ஹேல்ஸ் 1 (1), பிலிப் சால்ட் 10 (9) ஆகியோர் பவர் பிளே ஓவர்களிலேயே ஆட்டமிழந்தனர். அடுத்து ஹேரி ப்ரூக்ஸ் 20 (23), மொயின் அலி 19 (13) ஆகியோர் பென் ஸ்டோக்ஸுடன் 52 (49) பார்ட்னர்ஷிப் அமைத்ததால் இங்கிலாந்து அணி 19 ஓவர்களில் 138/5 ரன்களை சேர்த்து, 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்று கோப்பையை தட்டித்தூக்கியது.
அப்ரீதிக்கு காயம்:
இப்போட்டியில் சிறப்பாக பந்துவீசக் கொண்டிருந்த ஷாஹீன் அப்ரீதிக்கு, பீல்டிங் செய்துகொண்டிருந்தபோது காலில் காயம் ஏற்பட்டது. பெவிலியன் திரும்பினார். மீண்டும் பெவிலியன் திரும்பிய அப்ரீதிக்கு காயத்தின் பாதிப்பு இருந்துகொண்டேதான் இருந்தது. இதனால், அப்ரீதி 16.1ஆவது பந்தை மட்டும் வீசிவிட்ட பெவிலியன் திரும்பினார். இதனால், அப்ரீதி தனது கடைசி இரண்டு ஓவர் கோட்டாவில் பந்துவீசவில்லை.
பாபர் அசாம் பேட்டி:
இப்போட்டி முடிந்தப் பிறகு பேசிய பாபர் அசாம், ‘‘சாம்பியன் பட்டம் வென்ற இங்கிலாந்து அணிக்கு வாழ்த்துக்கள். அவர்கள் தகுதியான அணிதான். இன்றைய போட்டியில் சிறப்பாக விளையாடினார்கள். நாங்கள் 20 ரன்கள் வரை குறைவாக அடித்தது தோல்விக்கு முக்கிய காரணம். அதுமட்டுமல்ல, ஷாஹீன் அப்ரீதி தனது கடைசி இரண்டு ஓவர்களை வீசாததும் பெரும் பின்னடைவாக இருந்தது. அப்ரீதிக்கு காயம் ஏற்படாமல் இருந்ததிருந்தால் முடிவில் மாற்றம் இருந்திருக்கும். விளையாட்டில் இது இயல்பான ஒன்று"
"நாங்கள் இத்தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் தோற்று, அடுத்து சிறப்பான கம்பேக் கொடுத்து இறுதிப் போட்டிவரை முன்னேறினோம். பௌலர்கள் தொடர்ந்து அபாரமாக செயல்பட்டு வந்தார்கள். உலகின் சிறந்த பௌலிங் அட்டாக் எங்களிடம் இருக்கிறது. தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் ரசிகர்களுக்கு நன்றி’’ எனக் கூறினார்.