ஆப்நகரம்

‘டி20 கிரிக்கெட்’…4 ஓவர்களும் மெய்டன்: உலக சாதனை படைத்த இந்திய பௌலர்: ரசிகர்கள் கொண்டாட்டம்!

நான்கு ஓவர்களையும் மெய்டனாக வீசி, சாதனை படைத்துள்ளார் இந்திய பௌலர்.

Samayam Tamil 9 Nov 2021, 7:01 am
சையத் முஷ்டாக் அலி டி20 தொடர், கடந்த நவம்பர் 4ஆம் தேதி துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 38 அணிகள் பங்கேற்றுள்ளன.
Samayam Tamil அக்ஷய் கர்நேவர்


விதர்பா இன்னிங்ஸ்:

மணிப்பூர் அணிக்கு எதிரான லீக் போட்டியில் டாஸ் வென்ற விதர்பா அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணியில், ஓபனர் அதர்வா டைட் 46 (21), ஜிடேஷ் ஷர்மா 71 (31), வான்கடே 49 (16) ஆகியோர் ரன் மழை பொழிந்ததால், விதர்பா 20 ஓவர்களில் 222/4 ரன்கள் குவித்தது.

மணிப்பூர் இன்னிங்ஸ்:


இலக்கை துரத்திக் களமிறங்கிய மணிப்பூர் அணியில் ஒரு பேட்ஸ்மேன் கூட பெரிய ஸ்கோர் அடிக்கவில்லை. அதிகபட்சமாக யும்னம் 18 (12) ரன்கள் சேர்த்தார். மற்றவர்கள் ஒற்றை இலக்க ரன்கள் மட்டும் எடுத்து நடையைக் கட்டியதால் 55/10 ரன்கள் மட்டும் எடுத்து 167 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

செம்ம ரெக்கார்ட்:

குறிப்பாக, விதர்பா அணி ஸ்பின்னர் அக்ஷய் கர்நேவர், மணிப்பூர் பேட்ஸ்மேன்களுக்கு எதிராக 4 ஓவர்கள் வீசி ஒரு ரன்கூட விட்டுக்கொடுக்கவில்லை. இரண்டு விக்கெட்களையும் கைப்பற்றி அசத்தினார். இது உலக சாதனையாக பார்க்கப்படுகிறது. இதற்குமுன், உலகின் எந்த ஒரு பௌலரும் டி20 கிரிக்கெட்டில் 4 ஓவர்களையும் மெய்டன் வீசியது கிடையாது.

இதனால் அக்ஷய் கர்நேவரை இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவரது பெயர் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்