ஆப்நகரம்

உலகக் கோப்பையில் அர்ஜென்டினாவுக்கு மிகப் பெரிய சறுக்கல்!

பிரான்ஸ் அணிக்கு எதிரான தோல்வியையடுத்து உலகக்கோப்பை அரங்கில் 12 ஆண்டுகளுக்குப் பின் மிகப் பெரிய தோல்வியை அர்ஜென்டினா சந்தித்துள்ளது.

Samayam Tamil 1 Jul 2018, 2:51 am
கசன்: பிரான்ஸ் அணிக்கு எதிரான தோல்வியையடுத்து உலகக்கோப்பை அரங்கில் 12 ஆண்டுகளுக்குப் பின் மிகப் பெரிய தோல்வியை அர்ஜென்டினா சந்தித்துள்ளது.
Samayam Tamil 3


ரஷ்யாவில் 21-வது உலகக் கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. இதில் லீக் சுற்று போட்டிகள் முடிந்து, நாக் அவுட் சுற்று இன்று துவங்கியது. இதன் முதல் நாக் அவுட் போட்டியில் பிரான்ஸ், அர்ஜென்டினா அணிகள் மோதின.

ஆனால் மெஸ்சியின் அர்ஜெண்டினா அணி, பிரான்சிடம் 3-4 என உதை வாங்கி வெளியேறியது. இந்நிலையில் 2-2 என இரு போட்டி சம நிலை வகித்த போது, பிரான்ஸின் 19 வயதாகும் பாப்பே (64 68வது நிமிடம்) இரட்டை அடி கொடுக்க, பிரான்ஸ் வெற்றி உறுதியானது.

இதன் மூலம், மிகவும் குறைந்த வயதில் ஒரு போட்டியில் இரண்டு கோல்கள் அடித்த இரண்டாவது வீரர் என்ற சாதனையைப் படைத்தார் பாப்பே. முன்னதாக பிரேசில் ஜாம்பவான் பீலே, கடந்த 1958ல் உலகக்கோப்பை ஃபைனலில் இரண்டு கோல்கள் அடித்தார். அப்போது பீலேவுக்கு வயது 17. சுமார் 60 ஆண்டுகளுக்குப் பின் பீலேவுக்கு பின் ஒரே போட்டியில் இரண்டு அடித்த வீரர் என்ற பெருமை பெற்றார் பாப்பே.

மோசமான தோல்வி.....
உலகக்கோப்பை அரங்கில் இரு முறை சாம்பியனான அர்ஜென்டினா, 17வது முறையாக உலகக் கோப்பையில் விளையாடியது. கடந்த1978, 1986ல் சாம்பியன் பட்டத்தை வென்ற அர்ஜெண்டினா. 1930, 1990, 2014ல் இரண்டாவது இடம் பிடித்தது.

பிரான்சிடம் 4-3 என தோல்வியடைந்த அர்ஜெண்டினா கடந்த 2002ல் லீக் சுற்றில் வெளியேறியது தான், மிகவும் மோசமான தோல்வியாகும். 1998, 2006, 2010 காலிறுதி, 2014ல் ஃபைனல் வரை முன்னேறிய அர்ஜென்டினா இந்த தோல்வி மிகப் பெரிய சறுக்கலாக அமைந்தது.

Argentina faced humiliating defeat in the fifa world cup.

அடுத்த செய்தி

டிரெண்டிங்