கத்தாரில் நடக்கும் உலகக்கோப்பை கால்பந்து 2022 தொடரின் ரவுண்ட் ஆஃப் 16 சுற்று களைகட்ட ஆரம்பித்துவிட்டது. முதல் போட்டியில் நெதர்லாந்து 3-1 என்ற கோல்கணக்கில் அமெரிக்காவை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்குள் நுழைந்தது. நெதர்லாந்து அணியில் டீபே, பிலிண்ட், டம்ப்ரைஸ் ஆகியோரும், அமெரிக்க அணியில் ரைட்டும் கோல் அடித்தனர். இதையடுத்து நடந்த அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா இடையிலான போட்டி மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியது. ஏனெனில் லியோனல் மெஸ்ஸி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்.
நாக்-அவுட் சுற்றில் முதல் கோல் கோல் மழை பொழிவார் என்றெல்லாம் ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் இருந்தனர். இந்த ஆசையை பூர்த்தி செய்யும் வகையில் பரபரப்பிற்கு சிறிதும் பஞ்சமின்றி போட்டி நடைபெற்றது. போட்டி தொடங்கிய 35வது நிமிடத்தில் ஒட்டமென்டி கொடுத்த பாஸை பாக்ஸின் சென்டரில் இருந்து இடது ஃபூட்டில் அடித்து அசத்தலாக கோலாக மாற்றினார். இது உலகக்கோப்பை நாக்-அவுட் சுற்றில் மெஸ்ஸி அடிக்கும் முதல் கோல் என்பதால் வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய விஷயமாக மாறிவிட்டது.
ஆல்வரஸ் அற்புத கோல்
உடனே கேரளா முதல் புவெனஸ் ஐரிஸ் வரை மெஸ்ஸி ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து 1 - 0 என முதல் பாதி நிறைவு பெற்றது. இரண்டாம் பாதி தொடங்கியதும் ஆட்டம் சூடுபிடித்தது. 57வது நிமிடத்தில் ஆஸ்திரேலிய கீப்பர் மேத்யூ ரையான் பந்தை பாஸ் செய்யும் போது நடந்த சிறிய தவறை சரியாக பயன்படுத்தி கொண்ட ஜூலியன் ஆல்வரஸ் அற்புதமாக கோலாக மாற்றினார்.
ஜூலியன் ஆல்வரஸ் 6வது வீரர்
இதன்மூலம் அர்ஜென்டினா அணிக்காக உலகக்கோப்பை தொடரில் களமிறங்கிய முதல் இரண்டு போட்டிகளிலும் கோல் அடித்த 6வது வீரர் என்ற பெருமையை ஜூலியன் ஆல்வரஸ் பெற்றார். இதனால் அர்ஜென்டினா 2-0 என முன்னிலை பெற்றது. இருப்பினும் தொடர்ந்து அட்டாக்கிங்கில் தீவிரம் காட்டி வந்தது. 77வது நிமிடத்தில் ஆஸ்திரேலிய அணியின் கிரைக் குட்வின் அர்ஜென்டினாவின் கோல் போஸ்டை நோக்கி இடது விங்கில் இருந்து அடித்தார்.
அர்ஜென்டினா சரமாரி அட்டாக்கிங்
அதை பெர்னான்டஸ் தடுக்க முயன்ற போது எதிர்பாராத விதமாக Own Goalஆக மாறியது. இது ஆஸ்திரேலியாவிற்கு ஆறுதல் அளிக்க அர்ஜென்டினாவிற்கு நெருக்கடியாக மாறியது. அதன்பிறகு பால் பொசஷனை தன்வசமே தொடர்ந்து வைத்திருக்க அர்ஜென்டினா முயன்றது. எப்படியாவது 3வது கோலை அடிக்க தீவிரம் காட்டியது. கோல் போஸ்டை நோக்கி சரமாரியாக ஷாட்களை அடித்து வந்தது.
காலிறுதி போட்டியில் நெதர்லாந்து
ஆனால் எதுவுமே கோலாக மாறாததால் 2-1 என்ற கோல்கணக்கில் அர்ஜென்டினா வெற்றி பெற்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது. வரும் 10ஆம் தேதி நடக்கும் அடுத்த போட்டியில் நெதர்லாந்து அணியுடன் அர்ஜென்டினா மோதுகிறது. லூசெயில் மைதானத்தில் இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு போட்டி தொடங்கவுள்ளது.
1,000வது போட்டியில் கோல்
ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நேற்று நடந்த நாக்-அவுட் போட்டி லியோனல் மெஸ்ஸியின் 1,000வது போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. இதில் ஒரு கோல் அடித்ததன் மூலம் உலகக்கோப்பை தொடரில் மெஸ்ஸி அடித்த கோல்களின் எண்ணிக்கை 9ஆக அதிகரித்துள்ளது. மேலும் அர்ஜென்டினா ஜாம்பவான் டியகோ மரடோனா உலகக்கோப்பை தொடரில் 8 கோல் அடித்திருந்த சாதனையை முறியடித்து புதிய வரலாறு படைத்தார் மெஸ்ஸி.
இவர் அடித்த மொத்த கோல்களின் எண்ணிக்கை 789ஆக அதிகரித்துள்ளது. மேலும் உலகக்கோப்பை தொடரில் மெஸ்ஸி உருவாக்கிய கோல் வாய்ப்புகள் 67ஆக அதிகரித்துள்ளது. கோல் மற்றும் அசிஸ்ட் ஆகியவற்றின் எண்ணிக்கை 15ஆகவும், மொத்த ட்ரிப்பிள்கள் 194ஆகவும் அதிகரித்தது.
நாக்-அவுட் சுற்றில் முதல் கோல்
ஆல்வரஸ் அற்புத கோல்
உடனே கேரளா முதல் புவெனஸ் ஐரிஸ் வரை மெஸ்ஸி ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து 1 - 0 என முதல் பாதி நிறைவு பெற்றது. இரண்டாம் பாதி தொடங்கியதும் ஆட்டம் சூடுபிடித்தது. 57வது நிமிடத்தில் ஆஸ்திரேலிய கீப்பர் மேத்யூ ரையான் பந்தை பாஸ் செய்யும் போது நடந்த சிறிய தவறை சரியாக பயன்படுத்தி கொண்ட ஜூலியன் ஆல்வரஸ் அற்புதமாக கோலாக மாற்றினார்.
ஜூலியன் ஆல்வரஸ் 6வது வீரர்
இதன்மூலம் அர்ஜென்டினா அணிக்காக உலகக்கோப்பை தொடரில் களமிறங்கிய முதல் இரண்டு போட்டிகளிலும் கோல் அடித்த 6வது வீரர் என்ற பெருமையை ஜூலியன் ஆல்வரஸ் பெற்றார். இதனால் அர்ஜென்டினா 2-0 என முன்னிலை பெற்றது. இருப்பினும் தொடர்ந்து அட்டாக்கிங்கில் தீவிரம் காட்டி வந்தது. 77வது நிமிடத்தில் ஆஸ்திரேலிய அணியின் கிரைக் குட்வின் அர்ஜென்டினாவின் கோல் போஸ்டை நோக்கி இடது விங்கில் இருந்து அடித்தார்.
அர்ஜென்டினா சரமாரி அட்டாக்கிங்
அதை பெர்னான்டஸ் தடுக்க முயன்ற போது எதிர்பாராத விதமாக Own Goalஆக மாறியது. இது ஆஸ்திரேலியாவிற்கு ஆறுதல் அளிக்க அர்ஜென்டினாவிற்கு நெருக்கடியாக மாறியது. அதன்பிறகு பால் பொசஷனை தன்வசமே தொடர்ந்து வைத்திருக்க அர்ஜென்டினா முயன்றது. எப்படியாவது 3வது கோலை அடிக்க தீவிரம் காட்டியது. கோல் போஸ்டை நோக்கி சரமாரியாக ஷாட்களை அடித்து வந்தது.
காலிறுதி போட்டியில் நெதர்லாந்து
ஆனால் எதுவுமே கோலாக மாறாததால் 2-1 என்ற கோல்கணக்கில் அர்ஜென்டினா வெற்றி பெற்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது. வரும் 10ஆம் தேதி நடக்கும் அடுத்த போட்டியில் நெதர்லாந்து அணியுடன் அர்ஜென்டினா மோதுகிறது. லூசெயில் மைதானத்தில் இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு போட்டி தொடங்கவுள்ளது.
1,000வது போட்டியில் கோல்
ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நேற்று நடந்த நாக்-அவுட் போட்டி லியோனல் மெஸ்ஸியின் 1,000வது போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. இதில் ஒரு கோல் அடித்ததன் மூலம் உலகக்கோப்பை தொடரில் மெஸ்ஸி அடித்த கோல்களின் எண்ணிக்கை 9ஆக அதிகரித்துள்ளது. மேலும் அர்ஜென்டினா ஜாம்பவான் டியகோ மரடோனா உலகக்கோப்பை தொடரில் 8 கோல் அடித்திருந்த சாதனையை முறியடித்து புதிய வரலாறு படைத்தார் மெஸ்ஸி.
இவர் அடித்த மொத்த கோல்களின் எண்ணிக்கை 789ஆக அதிகரித்துள்ளது. மேலும் உலகக்கோப்பை தொடரில் மெஸ்ஸி உருவாக்கிய கோல் வாய்ப்புகள் 67ஆக அதிகரித்துள்ளது. கோல் மற்றும் அசிஸ்ட் ஆகியவற்றின் எண்ணிக்கை 15ஆகவும், மொத்த ட்ரிப்பிள்கள் 194ஆகவும் அதிகரித்தது.