கத்தாரில் நடக்கும் 2022 உலகக்கோப்பை தொடரில் 32 அணிகள் பங்கேற்றன. இதன் குரூப் சுற்றில் முன்னாள் உலக சாம்பியனாக விளங்கும் அர்ஜென்டினாவின் தோல்வி பேசுபொருளாக மாறியது. லியோனல் மெஸ்ஸியின் அணியை ஆசியாவில் இருந்து சென்ற சவுதி அரேபியா 1-2 என்ற கோல்கணக்கில் வென்றிருந்தது. இதுபற்றி இந்திய அணியின் முன்னாள் கால்பந்து வீரர் மோகன்ராஜ் நல்லப்பன் கூறுகையில், சவுதி அரேபியாவின் வெற்றியானது ஆசிய அளவில் நம்பிக்கை கொடுத்திருக்கிறது.
நான்கு ஆண்டுகால உழைப்பு எப்படிப்பட்ட ஜாம்பவானாக இருந்தாலும் வெற்றி பெற முடியும் என்பதை உணர்த்தியுள்ளது. உலகக்கோப்பை வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய விஷயம். சவுதி அரேபிய கால்பந்து அணியை பொறுத்தவரை உலகக்கோப்பை தொடருக்காக கடந்த நான்கு ஆண்டுகளாகவே தயாராகி வந்துள்ளனர். அதற்கு பலனாக தான் அர்ஜென்டினாவை தோற்கடித்துள்ளனர். எனவே சரியாக திட்டமிட்டு போதிய பயிற்சி மற்றும் வியூகத்துடன் களமிறங்கினால் எத்தகைய ஜாம்பவானையும் வீழ்த்தலாம்.
அடுத்த உலகக்கோப்பை
இருப்பினும் அடுத்த போட்டியில் பின்லாந்து உடன் 2-0 என தோல்வியை தழுவினர். இதையும் கவனிக்க வேண்டியுள்ளது. சவுதியின் வெற்றி அடுத்தடுத்த கட்டங்களுக்கு எடுத்து செல்லப்பட வேண்டும். அடுத்து வரும் 2026 ஃபிஃபா உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கும் கால்பந்து அணிகளின் எண்ணிக்கை 48ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆசியாவில் இருந்து நிறைய அணிகள் கலந்து கொள்ள வாய்ப்பு ஏற்படும். அதேசமயம் எந்தளவிற்கு உலகக்கோப்பைக்கு தயாராகிறோம் என்பது மிக முக்கியம். இதில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன.
ஐரோப்பிய லீக்குகள்
உலகின் பெரிய லீக்குகளில் அதிகம் விளையாட வேண்டும். இதன்மூலம் நல்ல அனுபவத்தை பெறலாம். உதாரணமாக லியோனல் மெஸ்ஸியை எடுத்துக் கொண்டால் ஸ்பெயின் நாட்டின் லா லிகா தொடரில் ஆடும் பார்சிலோனா அணியில் தான் நீண்ட காலம் விளையாடினார். அதன்பிறகு பிரான்ஸின் லீக் 1 தொடரில் ஆடும் பி.எஸ்.ஜி அணியில் தற்போது விளையாடி வருகிறார். இதேபோல் 5 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மரும் பி.எஸ்.ஜி அணிக்காக விளையாடி கொண்டிருக்கிறார். அவர்கள் நாட்டில் அல்லது தென் அமெரிக்காவில் இல்லாத லீக்குகளா?
ஆசிய அணிகளின் கனவு
அப்புறம் ஏன் ஐரோப்பாவிற்கு வர வேண்டும். ஏனெனில் உலகத்தரம் வாய்ந்த லீக்குகள், அணிகள் இங்கு தான் இருக்கின்றன. இவற்றில் விளையாட வேண்டும் என்று தான் வீரர்களும் விரும்புகின்றனர். உலகத்தரம் வாய்ந்த பயிற்சியாளர்களையும் ஐரோப்பிய லீக் அணிகளில் பார்க்க முடிகிறது. இதைத்தான் ஆசிய அணிகளும் குறிவைக்க வேண்டும். ஐரோப்பிய லீக்குகளில் விளையாடி எந்தளவிற்கு முன்னிலை பெறுகிறீர்களோ, அந்தளவிற்கு அவர்கள் நாட்டின் கால்பந்திற்கு பெரிதும் உதவிகரமாக இருக்கும்.
சிறுவயது முதலே பயிற்சி
ஏனெனில் உலகக்கோப்பை என்று வரும் போது ஐரோப்பிய ஜாம்பவான்களை தான் எதிர்த்து விளையாட வேண்டி வரும். இதற்கு முதலில் சிறப்பான பயிற்சியை சிறு வயதில் இருந்தே அளிக்க வேண்டும். நம் ஊரில் 4 அல்லது 5 வயதில் பள்ளியில் கொண்டு போய் சேர்ப்பதை போல, ஐரோப்பாவில் கால்பந்து பயிற்சியில் சேர்த்து விடுகின்றனர். அந்த அளவிற்கு அடிமட்டத்தில் இருந்து பயிற்சியை தொடங்க வேண்டும். அந்த வயதுக்கேற்ப பயிற்சி அளிக்க உரிய பயிற்சியாளர்களும் அவசியம். இதுமட்டும் இருந்தால் போதாது. போதிய உள்கட்டமைப்பு வசதிகளும் தேவை.
இந்தியாவின் கிரிக்கெட் மோகம்
இதேபோல் தேசிய அளவில் நடத்தப்படும் லீக்குகளின் தரம் உயர்த்தப்பட வேண்டும். ஆசிய அளவில் ஒப்பிடும் போது இந்தியா இன்னும் மேம்பட வேண்டியுள்ளது. முதலில் உள்நாட்டு லீக்குகளில் விளையாட வைத்து, பின்னர் வெளிநாட்டு லீக்குகளில் ஆட வைக்க வேண்டும். குறிப்பாக ஐரோப்பிய லீக்குகளில் ஆடும் வகையில் கொண்டு செல்லப்பட வேண்டும். இந்தியாவில் கிரிக்கெட் மீதான மோகம் தான் அதிகமாக உள்ளது. ஒவ்வொரு தெருவிலும் கிரிக்கெட் விளையாடுவதை பார்க்கலாம். இதேபோல் கால்பந்து விளையாடவும் முன்வர வேண்டும்.
வாழ்க்கை தரம் உயர்வு
அதுமட்டுமின்றி 15 வயதுக்கு உட்பட்ட, 16 வயதுக்கு உட்பட்ட, 19 வயதுக்கு உட்பட்ட, 23 வயதுக்கு உட்பட்ட கால்பந்து அணிகளில் தரம் வாய்ந்த வீரர்கள் உருவாக்கப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும். இவர்கள் தான் எதிர்காலத்தில் சீனியர் அணியில் விளையாடக் கூடியவர்கள். எனவே கால்பந்தை ஒவ்வொரு படிநிலைகளாக பட்டை தீட்ட வேண்டியது அவசியம். திறமை உள்ளவர்களுக்கு தவறாமல் வாய்ப்புகள் வழங்க வேண்டும். லீக் தொடர்கள் மற்றும் தேசிய அணிக்காக விளையாடினால் எப்படிப்பட்ட வாழ்க்கை தரத்தை பெற முடியும் என்பதை சலுகைகள், வேலைவாய்ப்பு போன்றவற்றின் மூலம் உணர்த்த வேண்டும். இப்படி செய்தால் ஆசிய அணிகள் உலகக்கோப்பை தொடரில் இன்னும் சிறப்பான வெற்றியை பதிவு செய்யும் என்று தெரிவித்தார்.
நான்கு ஆண்டுகால உழைப்பு
அடுத்த உலகக்கோப்பை
இருப்பினும் அடுத்த போட்டியில் பின்லாந்து உடன் 2-0 என தோல்வியை தழுவினர். இதையும் கவனிக்க வேண்டியுள்ளது. சவுதியின் வெற்றி அடுத்தடுத்த கட்டங்களுக்கு எடுத்து செல்லப்பட வேண்டும். அடுத்து வரும் 2026 ஃபிஃபா உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கும் கால்பந்து அணிகளின் எண்ணிக்கை 48ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆசியாவில் இருந்து நிறைய அணிகள் கலந்து கொள்ள வாய்ப்பு ஏற்படும். அதேசமயம் எந்தளவிற்கு உலகக்கோப்பைக்கு தயாராகிறோம் என்பது மிக முக்கியம். இதில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன.
ஐரோப்பிய லீக்குகள்
உலகின் பெரிய லீக்குகளில் அதிகம் விளையாட வேண்டும். இதன்மூலம் நல்ல அனுபவத்தை பெறலாம். உதாரணமாக லியோனல் மெஸ்ஸியை எடுத்துக் கொண்டால் ஸ்பெயின் நாட்டின் லா லிகா தொடரில் ஆடும் பார்சிலோனா அணியில் தான் நீண்ட காலம் விளையாடினார். அதன்பிறகு பிரான்ஸின் லீக் 1 தொடரில் ஆடும் பி.எஸ்.ஜி அணியில் தற்போது விளையாடி வருகிறார். இதேபோல் 5 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மரும் பி.எஸ்.ஜி அணிக்காக விளையாடி கொண்டிருக்கிறார். அவர்கள் நாட்டில் அல்லது தென் அமெரிக்காவில் இல்லாத லீக்குகளா?
ஆசிய அணிகளின் கனவு
அப்புறம் ஏன் ஐரோப்பாவிற்கு வர வேண்டும். ஏனெனில் உலகத்தரம் வாய்ந்த லீக்குகள், அணிகள் இங்கு தான் இருக்கின்றன. இவற்றில் விளையாட வேண்டும் என்று தான் வீரர்களும் விரும்புகின்றனர். உலகத்தரம் வாய்ந்த பயிற்சியாளர்களையும் ஐரோப்பிய லீக் அணிகளில் பார்க்க முடிகிறது. இதைத்தான் ஆசிய அணிகளும் குறிவைக்க வேண்டும். ஐரோப்பிய லீக்குகளில் விளையாடி எந்தளவிற்கு முன்னிலை பெறுகிறீர்களோ, அந்தளவிற்கு அவர்கள் நாட்டின் கால்பந்திற்கு பெரிதும் உதவிகரமாக இருக்கும்.
சிறுவயது முதலே பயிற்சி
ஏனெனில் உலகக்கோப்பை என்று வரும் போது ஐரோப்பிய ஜாம்பவான்களை தான் எதிர்த்து விளையாட வேண்டி வரும். இதற்கு முதலில் சிறப்பான பயிற்சியை சிறு வயதில் இருந்தே அளிக்க வேண்டும். நம் ஊரில் 4 அல்லது 5 வயதில் பள்ளியில் கொண்டு போய் சேர்ப்பதை போல, ஐரோப்பாவில் கால்பந்து பயிற்சியில் சேர்த்து விடுகின்றனர். அந்த அளவிற்கு அடிமட்டத்தில் இருந்து பயிற்சியை தொடங்க வேண்டும். அந்த வயதுக்கேற்ப பயிற்சி அளிக்க உரிய பயிற்சியாளர்களும் அவசியம். இதுமட்டும் இருந்தால் போதாது. போதிய உள்கட்டமைப்பு வசதிகளும் தேவை.
இந்தியாவின் கிரிக்கெட் மோகம்
இதேபோல் தேசிய அளவில் நடத்தப்படும் லீக்குகளின் தரம் உயர்த்தப்பட வேண்டும். ஆசிய அளவில் ஒப்பிடும் போது இந்தியா இன்னும் மேம்பட வேண்டியுள்ளது. முதலில் உள்நாட்டு லீக்குகளில் விளையாட வைத்து, பின்னர் வெளிநாட்டு லீக்குகளில் ஆட வைக்க வேண்டும். குறிப்பாக ஐரோப்பிய லீக்குகளில் ஆடும் வகையில் கொண்டு செல்லப்பட வேண்டும். இந்தியாவில் கிரிக்கெட் மீதான மோகம் தான் அதிகமாக உள்ளது. ஒவ்வொரு தெருவிலும் கிரிக்கெட் விளையாடுவதை பார்க்கலாம். இதேபோல் கால்பந்து விளையாடவும் முன்வர வேண்டும்.
வாழ்க்கை தரம் உயர்வு
அதுமட்டுமின்றி 15 வயதுக்கு உட்பட்ட, 16 வயதுக்கு உட்பட்ட, 19 வயதுக்கு உட்பட்ட, 23 வயதுக்கு உட்பட்ட கால்பந்து அணிகளில் தரம் வாய்ந்த வீரர்கள் உருவாக்கப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும். இவர்கள் தான் எதிர்காலத்தில் சீனியர் அணியில் விளையாடக் கூடியவர்கள். எனவே கால்பந்தை ஒவ்வொரு படிநிலைகளாக பட்டை தீட்ட வேண்டியது அவசியம். திறமை உள்ளவர்களுக்கு தவறாமல் வாய்ப்புகள் வழங்க வேண்டும். லீக் தொடர்கள் மற்றும் தேசிய அணிக்காக விளையாடினால் எப்படிப்பட்ட வாழ்க்கை தரத்தை பெற முடியும் என்பதை சலுகைகள், வேலைவாய்ப்பு போன்றவற்றின் மூலம் உணர்த்த வேண்டும். இப்படி செய்தால் ஆசிய அணிகள் உலகக்கோப்பை தொடரில் இன்னும் சிறப்பான வெற்றியை பதிவு செய்யும் என்று தெரிவித்தார்.