ஆப்நகரம்

மெஸ்ஸி அணி தோற்றதால் கேரள இளைஞர் தற்கொலை

உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியில் அர்ஜெண்டினா அணி தோற்ற பின் காணாமல் போன கேரளாவைச் சேர்ந்த இளைஞர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

Samayam Tamil 24 Jun 2018, 7:03 pm
உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியில் அர்ஜெண்டினா அணி தோற்ற பின் காணாமல் போன கேரளாவைச் சேர்ந்த இளைஞர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
Samayam Tamil Messi-sad-pic_d


உலகக் கோப்பை கால்பந்துப் போட்டிகள ஜூன் 14ஆம் தேதி தொடங்கின. 32 நாடுகளைச் சேர்ந்த அணிகள் பங்கேற்கும் இத்தொடர் ஜூலை 15ஆம் தேதி வரை நடக்கிறது.

இதில் கடந்த வியாழக்கிழமை நடந்த லீக் போட்டி ஒன்றில் உலகப் புகழ்பெற்ற கால்பந்து நட்சத்திரம் மெஸ்ஸியின் அர்ஜெண்டினா அணியை குரேஷியா அணி 3-0 என்ற கோல் கணக்கில் படுதோல்வி அடையச் செய்தது.

இதனால் உலகம் முழுதும் உள்ள மெஸ்ஸி ரசிகர்கள் சோகத்தில் மூழ்கிய நிலையில், கேரளாவைச் சேர்ந்த இளைஞர் தினு ஜோசப் போட்டிக்கு மறுநாளான வெள்ளிக்கிழமை காலை காணாமல் போனார்.

கோட்டயம் அருமானூரைச் சேர்ந்த இவரது வீட்டில் தற்கொலைக் கடிதம் ஒன்றை கைப்பற்றிய போலீசார் இரண்டு நாட்களாக அவரைத் தேடி வந்தனர். இந்நிலையில் இன்று கோட்டயம் அருகே உள்ள இல்லிக்கல் பாலத்தின் அருகே ஆற்றில் அவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்