ஆப்நகரம்

முத்தமிட வந்தவருக்கு பெண் பத்திரிகையாளர் அறிவுரை

ரஷ்யாவில் நடக்கும் உலகக் கோப்பை கால்பந்துப் போட்டி பற்றி செய்தி வழங்கிக்கொண்டிருந்தபோது முத்தமிட முயன்றவருக்கு பெண் பத்திரிகையாளர் நல்ல அறிவுரை வழங்கியுள்ளார்.

Samayam Tamil 26 Jun 2018, 7:24 pm
ரஷ்யாவில் நடக்கும் உலகக் கோப்பை கால்பந்துப் போட்டி பற்றி செய்தி வழங்கிக்கொண்டிருந்தபோது முத்தமிட முயன்றவருக்கு பெண் பத்திரிகையாளர் நல்ல அறிவுரை வழங்கியுள்ளார்.
Samayam Tamil vlcsnap-2018-06-26-11h07m27s524-e1529991557117


உலகக் கோப்பை கால்பந்துப் போட்டிகள் ஜூன் 14ஆம் தேதி தொடங்கின. 32 நாடுகளைச் சேர்ந்த அணிகள் பங்கேற்கும் இத்தொடர் ஜூலை 15ஆம் தேதி வரை நடக்கிறது.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை யெகேட்ரின்பெர்க் நகரில் நடைபெற்ற ஜப்பான் – செனகல் அணிகளுக்கு இடையேயான போட்டி குறித்து பிரேசிலைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் ஜூலியா கிமாரேஸ் செய்தி மைதானத்திற்கு வெளியே நின்று செய்தி வழங்கிக்கொண்டிருந்தார்.

நேரடி ஒளிப்பரப்பில் அவர் பேசிக்கொண்டிருந்த நிலையில் ஒருவர் பாய்ந்து வந்து அவரை முத்தமிட முயற்சித்தார். சட்டென்று விலகிய ஜூலியா, “இப்படி எந்தப் பெண்ணிடமும் நடந்துகொள்ளாதீர்கள். இதற்கு ஒருபோதும் நான் அனுமதிக்க மாட்டேன். பெண்களை மதியுங்கள்.” என்று சீறினார். முத்தமிட வந்த நபரும் உடனே மன்னிப்பு கோரினார்.
உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியைப் பார்க்க வருபவர்கள் மத்தியில் பெண் பத்திரிகையாளரை முத்தமிடுவது ஒரு போட்டி போல நடைபெற்று வருகிறது.
சில நாட்கள் முன்பாக, இதே போல நேரலையில் செய்தி வழங்கிக்கொண்டிருந்த கொலம்பியாவைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் ஒருவரை ஒருவர் திடீரென இரண்டு முறை குறுக்கிட்டு முத்தமிட்டார். பின், பந்தையத்திற்காக அப்படிச் செய்ததாகக் கூறி மன்னிப்பு கோரினார். அந்தப் பெண் பத்திரிகையாளர் அவரை மன்னித்துவிட்டதாகக் கூறினாலும், அதைச் சகித்துக்கொள்ள முடியவில்லை என்றும் தெரிவித்தார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்