பிரேசில் அணியின் பிரபல கால்பந்து வீரர் நெய்மர், உலகின் சிறந்த வீரர் நான் தான் என தெரிவித்துள்ளார்.
கடந்த 14 ஆம் தேதி, பீபா உலகக்கோப்பை ரஷ்யாவில் மிகவும் கோலாகலமாக தொடங்கியது. 32 அணிகள் பங்கேற்றுள்ள இந்த உலகக்கோப்பையில், பிரேசில், அர்ஜென்டினா, ஸ்பெயின், ஜெர்மனி, போர்ச்சுகல், பெல்ஜியம் உள்ளிட்ட அணிகள் கோப்பையை வெல்ல வாய்ப்புள்ளதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், உலகின் மிகச் சிறந்த வீரர்களில் ஒருவராக கருதப்படும் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணியின்நட்சத்திர வீரரும், பிரேசில் அணியைச் சேர்ந்தவருமான நெய்மர் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அப்போது பேசிய அவர், “மற்ற வீரர்கள் அனைவரையும் விட மெஸ்ஸியும் ரொனால்டோவும் மிகவும் திறமையானவர்களாக உள்ளனர். இந்த உலகின் சிறந்த கால்பந்து ஆட்டக்காரர் நான் தான். ஏனெனில், மெஸ்ஸியும் ரொனால்டோவும் வேற்றுகிரகவாசிகளைப் போல் விளையாடுகிறார்கள்” என்று புகழ்ந்துள்ளார்.
இளம் வீரரான நெய்மர், மெஸ்ஸி மற்றும் ரொனால்டோ போன்ற முன்னணி வீரர்களுக்கு இணையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். பல்வேறு கோப்பைகளை வென்று சாதனைப் படைத்துள்ள நெய்மர், இப்போது தனது நாட்டுக்காக உலகக்கோப்பையை வெல்லும் கனவில் உள்ளார்.
கடந்த 14 ஆம் தேதி, பீபா உலகக்கோப்பை ரஷ்யாவில் மிகவும் கோலாகலமாக தொடங்கியது. 32 அணிகள் பங்கேற்றுள்ள இந்த உலகக்கோப்பையில், பிரேசில், அர்ஜென்டினா, ஸ்பெயின், ஜெர்மனி, போர்ச்சுகல், பெல்ஜியம் உள்ளிட்ட அணிகள் கோப்பையை வெல்ல வாய்ப்புள்ளதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், உலகின் மிகச் சிறந்த வீரர்களில் ஒருவராக கருதப்படும் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணியின்நட்சத்திர வீரரும், பிரேசில் அணியைச் சேர்ந்தவருமான நெய்மர் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அப்போது பேசிய அவர், “மற்ற வீரர்கள் அனைவரையும் விட மெஸ்ஸியும் ரொனால்டோவும் மிகவும் திறமையானவர்களாக உள்ளனர். இந்த உலகின் சிறந்த கால்பந்து ஆட்டக்காரர் நான் தான். ஏனெனில், மெஸ்ஸியும் ரொனால்டோவும் வேற்றுகிரகவாசிகளைப் போல் விளையாடுகிறார்கள்” என்று புகழ்ந்துள்ளார்.
இளம் வீரரான நெய்மர், மெஸ்ஸி மற்றும் ரொனால்டோ போன்ற முன்னணி வீரர்களுக்கு இணையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். பல்வேறு கோப்பைகளை வென்று சாதனைப் படைத்துள்ள நெய்மர், இப்போது தனது நாட்டுக்காக உலகக்கோப்பையை வெல்லும் கனவில் உள்ளார்.