ஆப்நகரம்

உலகக்கோப்பையில் தோற்ற சவூதி அரேபியா அணி வீரர்களுக்கு தண்டனை??

உலகக்கோப்பையின் முதல் போட்டியில் ரஷ்யா அணியுடனான போட்டியில் படுதோல்வியடைந்த சவூதி அரேபியா அணிக்கு தண்டனை வழங்கப்படலாம் என செய்திகள் வெளியாகி உள்ளது.

Samayam Tamil 17 Jun 2018, 2:54 pm
உலகக்கோப்பையின் முதல் போட்டியில் ரஷ்யா அணியுடனான போட்டியில் படுதோல்வியடைந்த சவூதி அரேபியா அணிக்கு தண்டனை வழங்கப்படலாம் என செய்திகள் வெளியாகி உள்ளது.
Samayam Tamil உலகக்கோப்பையில் தோற்ற சவூதி அரேபியா அணி வீரர்களுக்கு தண்டனை??
உலகக்கோப்பையில் தோற்ற சவூதி அரேபியா அணி வீரர்களுக்கு தண்டனை??


உலகின் முன்னணி கால்பந்து அணிகள் பங்கேற்கும், பீபா கால்பந்து உலகக்கோப்பை கடந்த ஜூன் 14 ஆம் தேதி, ரஷ்யாவில் கோலாகலமாக தொடங்கியது. இதன் முதல் போட்டியில், போட்டியை நடத்தும் ரஷ்ய அணியும், சவூதி அரேபியா அணியும் மோதின.

தரவரிசையில் 70 வது இடத்தில் உள்ள ரஷ்யா அணி, தரவரிசையில் 67வது இடத்தில் இருக்கும் சவூதி அரேபியாவை 5-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. முதல் போட்டியிலேயே சவூதி அரேபியா படுதோல்வி அடைந்ததால் அந்த அணி ரசிகர்கள் மிகவும் ஏமாற்றமடைந்தனர்.

இந்நிலையில், சவூதி அரேபியா வீரர்களுக்கு அந்நாட்டு அரசு அபராதம் விதிக்கப் போவதாக தகவல் வெளியானது. குறிப்பாக, அந்த அணியின் கோல் கீப்பருக்கு கடுமையான தண்டனை வழங்கப்படலாம எனவும் செய்திகள் வெளியாகின. ஆனால், அந்த செய்திகளில் உண்மை எதுவுமில்லை எனவும், வீரர்களுக்கு எவ்வித அபராதமும் விதிக்கப்படவில்லை எனவும் அந்நாட்டின் கால்பந்து கழகம் விளக்கமளித்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்