ஆப்நகரம்

யார் சிறந்த வீரர் மெஸ்ஸியா, ரொனால்டோவா? - சண்டையில் விவாகரத்தில் முடிந்த திருமணம்!

கால்பந்து போட்டியை ரசிப்பதை விட்டு விட்டு, சிறந்த கால்பந்து வீரர் யார் என்ற விவாதம் பெரிதாகி, அந்த பிரச்னை கடைசியில் தம்பதியரின் விவாகரத்தில் சென்று முடிந்துள்ளது.

Samayam Tamil 4 Jul 2018, 1:30 pm
கால்பந்து போட்டியை ரசிப்பதை விட்டு விட்டு, சிறந்த கால்பந்து வீரர் யார் என்ற விவாதம் பெரிதாகி, அந்த பிரச்னை கடைசியில் தம்பதியரின் விவாகரத்தில் சென்று முடிந்துள்ளது.
Samayam Tamil ronaldo-messi


உலகக் கோப்பையில் தொடங்கிய காதல் :
2002ல் நடந்த உலகக்கோப்பை போட்டியின் போது அர்சென் மற்றும் லியுட்மிலா ஆகியோர் ஒரு மதுபான விடுதியில் சந்தித்துள்ளனர். கால்பந்து மீது மட்டுமல்லாமல், அவர்களின் இருவருக்குமிடையேயும் காதல் மலர்ந்து திருமணம் செய்து கொண்டனர்.

உலகக் கோப்பையில் பிரிந்த காதல் :
இந்த காதல் தம்பதியரை தற்போது நடந்து வரும் உலகக் கோப்பை தொடரில் முடிவடைந்துள்ளது. அதற்கு காரணம் அர்சென் அர்ஜெண்டினா அணியின் நடசத்திர மெஸ்ஸி ரசிகராவார், லியுட்மிலா போர்ச்சுக் அணி நட்சத்திர வீரர் ரொனால்டோவின் ரசிகர்.

இவர்கள் இருவருக்கும் இடையே யார் சிறந்த வீரர் மெஸ்ஸியா- ரொனால்டோவா என்ற வாக்குவாதம் பல நாட்களாக நீடித்து வருகின்றது.

விவாகரத்து :
இந்நிலையில் அர்ஜெண்டினா - நைஜீரியா அணிகளுக்கிடையே போட்டி நடந்து கொண்டிருந்த போது மீண்டும் விவாதம் தொடங்கியது. அப்போது லியுட்மிலா, ஐஸ்லாந்துக்கு எதிராக மெஸ்ஸி பெனால்டி கோல் வாய்ப்பை வீணடித்தார் என அர்செனைப் பார்த்து கூறினார்.

இதனால் விவாதம் அதிகமாகி, அர்சென் தன் பெட்டி படுக்கையுடன், வீட்டை விட்டு கிளம்பினார். தொடர்ந்து மறுநாள் திருமண விவாகரத்து நோட்டீஸை அனுப்பினார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்