ஆப்நகரம்

Pro Kabaddi League: உ.பி. யோதாவிடம் சரணடைந்த ஜெய்ப்பூர் பாந்த்தர்ஸ்!

சென்னை : ஜெய்ப்பூர் அணிக்கு எதிரான புரோ கபடி லீக் போட்டியில் உ.பி.யோதா அணி வெற்றி பெற்றது.

Samayam Tamil 19 Aug 2019, 10:02 pm
ஐபிஎல்., பாணியில் துவங்கப்பட்ட புரோ கபடி லீக், இந்தியாவின் பல்வேறு நகரில் நடக்கிறது. இதில் 8 அணிகள் பங்கேற்கின்றன. இதில் உ.பி.யோதா, ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் மோதியது.
Samayam Tamil up yodha


மல்லுக்கட்டு:
இதில் துவக்கம் முதல் புள்ளிகள் பெற இரு அணி வீரர்களும் மல்லுக்கட்டினர். ஒருகட்டத்தில் உ.பி.யோதா அணி முன்னிலை பெற்றது. இதையடுத்து முதல் பாதியின் முடிவில் யோதா அணி 16 - 10 என 6 புள்ளிகள் முன்னிலை பெற்றது.

பரபரப்பாக துவங்கிய இரண்டாவது பாதியிலும் யோதா அணி வீரர்களின் ஆதிக்கமே அதிகமாக இருந்தது. கடைசி வரை ஜெய்ப்பூர் அணி வீரர்கள் போராடிய போதும், யோதா அணி வீரர்களின் ஆட்டத்துக்கு ஈடுகொடுக்க முடியவில்லை.


இறுதியில், உ.பி.யோதா அணி, ஜெய்ப்பூர் பிங்க் பாந்த்தர்ஸ் அணியை 31 - 24 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தியது.


புள்ளி விபரம்:
உ.பி.யோதா : ஜெய்ப்பூர் பாந்தர்ஸ்
18 ரெய்டு புள்ளிகள் 14
0 சூப்பர் ரெய்டுகள் 1
11 சமாளிக்கும் புள்ளிகள் 9
2 ஆல் அவுட் புள்ளிகள் 0
0 கூடுதல் புள்ளிகள் 1

அடுத்த செய்தி

டிரெண்டிங்