ஆப்நகரம்

சாய்னா நேவால் தோல்வி:ஒலிம்பிக் பதக்க கனவு தகர்ந்தது..!

ரியோ ஒலிம்பிக்கின் பாட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவு போட்டியில் இந்தியாவின் சாய்னா நேவால் தோல்வியடைந்து வெளியேறினார்.

TNN 14 Aug 2016, 7:16 pm
ரியோ ஒலிம்பிக்கின் பாட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவு போட்டியில் இந்தியாவின் சாய்னா நேவால் தோல்வியடைந்து வெளியேறினார்.
Samayam Tamil  saina nehwal out from rio olympic
சாய்னா நேவால் தோல்வி:ஒலிம்பிக் பதக்க கனவு தகர்ந்தது..!


இன்று மாலை தொடங்கிய முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் உக்ரைனின் மரியா உலிடினாவுடன் இந்தியாவின் சாய்னா நேவால் பலப்பரீட்சை நடத்தினார்.ஆட்டத்தின் தொடக்கம் முதல் இருவரும் விட்டுக்கொடுக்காமல் விளையாடினார்.இதனால் ஆட்டம் சூடுபிடித்தது.உக்ரைனிய வீராங்கனைக்கு சாய்னா நெருக்கடி கொடுத்தாலும்,தொடர்ந்து புள்ளிகளை கைப்பற்றி முன்னிலை பெறத் தவறினார்.இதனால் முதல் கேமை 18-21 என்ற புள்ளிகள் கணக்கில் இழந்தார்.

இரண்டாவது கேமை எப்படியாவது கைப்பற்றி,ஆட்டத்தை சமன் செய்ய சாய்னா முனைந்தாலும் அதற்கு பலன் கிடைக்கவில்லை.முதல் கேமில் செய்த அதே தவறுகளை இரண்டாவது கேமிலும் சாய்னா தொடர்ந்ததால்,இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட மரியா புள்ளிகளை குவித்தார்.இதனால் இரண்டாம் கேமில் 19-21 என்ற புள்ளிகள் கணக்கில் தோல்வியடைந்த சாய்னா,ரியோ ஒலிம்பிக்கின் பேட்மிண்டன் போட்டிகளிலிருந்து வெளியேறினார்.

இந்தியாவிற்கு பதக்கங்கள் பெற்றுத்தர அதிக வாய்ப்புகள் உள்ளதாக எதிர்பார்க்கப்பட்ட பலரும் காலிறுதிக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறி வருவதால்,இந்திய ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்