ரியோ : ஒலிம்பிக்கில் பெண்களுக்கான சைக்கிள் போட்டியின் போது விபத்து ஏற்பட்டு படுகாயமடைந்த நெதர்லாந்து வீராங்கனையின் உடல் நிலை தேரியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
ஒலிம்பிக் போட்டியின் 2ம் நாளான கடந்த ஞாயிறு அன்று நடந்த பெண்களுக்கான 136.9 கி.மீ சைக்கிள் போட்டி நடைபெற்றது. இதில் பங்கேற்ற நெதர்லாந்தை சேர்ந்த வீராங்கனை அன்னெமிக் வான் விலுடின் (33) ஒரு வளைவு திரும்பும்பொழுது எதிர்பாராத விதமாக நிலைதடுமாறியதில், சைக்கிளோடு தலை குப்புற கவிழ்ந்து விழுந்தார். இந்த விபத்தில் வான் விலுடினும் அவரது சைக்கிளும் ஒவ்வொரு புறமாக தூக்கி வீசப்பட்டது. சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் வான் விலுடின் உடல் நிலை குறித்து மருத்துவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். விபத்தில் வான் விலுடின் தண்டுவடத்தில் படுகாயமடைந்துள்ளார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது அவரின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.
ஒலிம்பிக் போட்டியின் 2ம் நாளான கடந்த ஞாயிறு அன்று நடந்த பெண்களுக்கான 136.9 கி.மீ சைக்கிள் போட்டி நடைபெற்றது. இதில் பங்கேற்ற நெதர்லாந்தை சேர்ந்த வீராங்கனை அன்னெமிக் வான் விலுடின் (33) ஒரு வளைவு திரும்பும்பொழுது எதிர்பாராத விதமாக நிலைதடுமாறியதில், சைக்கிளோடு தலை குப்புற கவிழ்ந்து விழுந்தார். இந்த விபத்தில் வான் விலுடினும் அவரது சைக்கிளும் ஒவ்வொரு புறமாக தூக்கி வீசப்பட்டது. சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் வான் விலுடின் உடல் நிலை குறித்து மருத்துவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். விபத்தில் வான் விலுடின் தண்டுவடத்தில் படுகாயமடைந்துள்ளார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது அவரின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.