ஆப்நகரம்

துவக்கவிழாவை காணமுடியாதது வருத்தமளிக்கிறது!

ஒலிம்பிக் துவக்கவிழாவை நேரில் காணமுடியாதது வருத்தமளிப்பதாக பிரேசிலின் இடைநீக்கம் செய்யப்பட்ட அதிபர் தில்மா ரூசெப் தெரிவித்துள்ளார்.

TOI Contributor 6 Aug 2016, 4:36 pm
பிரேசிலியா: ஒலிம்பிக் துவக்கவிழாவை நேரில் காணமுடியாதது வருத்தமளிப்பதாக பிரேசிலின் இடைநீக்கம் செய்யப்பட்ட அதிபர் தில்மா ரூசெப் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil brazils rousseff sad to miss rio olympic games party
துவக்கவிழாவை காணமுடியாதது வருத்தமளிக்கிறது!


பிரேசிலின் ரியோ நகரில் 31வது ஒலிம்பிக் போட்டிகள் கோலாகலமாக துவங்கியது. இதை காண முடியாதது வருத்தமளிப்பதாக அந்நாட்டு அதிபர் தில்மா ரூசெப் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து டுவிட்டரில் ரூசெப் வெளியிட்டுள்ள பதிவில்:
வண்ணமயமான ஒலிம்பிக் துவக்கவிழாவை நேரடியாக பார்க்கமுடியாதது வருத்தமளிக்கிறது. இருப்பினும் தொடர்ந்து போட்டிகளை டி-வியில் காண்பேன். பிரேசிலுக்கு எப்போதும் எனது ஆதரவு உண்டு.
இவ்வாறு அதில் குறிப்பிட்டிருந்தார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்