ஆப்நகரம்

சிந்துவால் பெருமை அடைகிறோம்: நாக்பூர் ரசிகர்கள்

ரியோ ஒலிம்பிக்கில் முதல் முறையாக கலந்து கொண்டு இந்திய நாட்டுக்கு வெள்ளிப்பதக்கம் பெற்றுக்கொடுத்த சிந்துவால் பெருமை அடைகிறோம் என்று நாக்பூர் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

TNN 19 Aug 2016, 11:39 pm
பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோவில் 31வது ஒலிம்பிக் போட்டி நடந்து வருகிறது. இன்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு பேட்மிண்டன் இறுதிப் போட்டியில் இந்தியாவின் பிவி சிந்து ஸ்பெயினின் கரோலினா மரினாவுடன் மோதினார். முதல் செட்டை எளிமையாக 21-19 என்று வென்ற சிந்துவுக்கு இரண்டாவது செட் கடும் சவாலாக இருந்தது.
Samayam Tamil fans celebrate as pvsindhu bags first ever olympic silver for india in badminton
சிந்துவால் பெருமை அடைகிறோம்: நாக்பூர் ரசிகர்கள்


இதனால், இந்த செட்டை 12-21 என இழந்தார். இந்நிலையில் வெற்றையை நிர்ணயிக்கும் கடைசி செட்டில் இருவரும் வெற்றிக்கு கடுமையாக போராடினார். ஆனால், சிந்துவால், கரோலினாவுக்கு சமமாக ஆட முடியவில்லை. இதனால், கரோலினா இந்த செட்டை 21-15 என்று கைப்பற்றி தங்கம் பெற்றார்.

சிந்துவின் இந்த வெற்றியை நாக்பூர் ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், கேக் வெட்டியும் கொண்டாடி வருகின்றனர். முதன் முறையாக கலந்து கொண்டு வெள்ளிப்பதக்கம் பெற்ற உன்னால் பெருமை அடைகிறோம் என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்