ஆப்நகரம்

பறிக்கப்பட்ட பதக்க கனவு: நர்சிங் விரக்தி

ஒலிம்பிக் பதக்க கனவு பறிக்கப்பட்டு விட்டதாக மல்யுத்த வீரர் நர்சிங் யாதவ் விரக்தி தெரிவித்துள்ளார்.

TNN 20 Aug 2016, 2:05 am
புதுதில்லி: ஒலிம்பிக் பதக்க கனவு பறிக்கப்பட்டு விட்டதாக மல்யுத்த வீரர் நர்சிங் யாதவ் விரக்தி தெரிவித்துள்ளார்.
Samayam Tamil had been stripped of olympic medal dream narsingh yadav
பறிக்கப்பட்ட பதக்க கனவு: நர்சிங் விரக்தி


ஒலிம்பிக்கில் ஆடவர் 74 கிலோ ப்ரீஸ்டைல் மல்யுத்தப் போட்டியில் பங்கேற்க இந்திய வீரர் நர்சிங் யாதவ் தகுதி பெற்றிருந்தார். இந்நிலையில், தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை அவர் பயன்படுத்தியதாக எழுந்த சர்ச்சையால், அவருக்கு நான்கு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

நர்சிங் யாதவிற்கு சாதகமாக தேசிய ஊக்க மருந்து தடுப்பு மையம் (நாடா) தீர்ப்பு வழங்கியதை எதிர்த்து விளையாட்டுக்கான சர்வதேச நடுவர் மன்றத்தில், சர்வதேச ஊக்கமருந்து தடுப்பு அமைப்பு (வாடா) செய்த மேல்முறையீட்டு வழக்கு விசாரணையின் முடிவில் அவருக்கு நான்கு ஆண்டுகள் தடை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நர்சிங் யாதவின் ஒலிம்பிக் கனவு பாழாகியது.

இந்நிலையில், தனது ஒலிம்பிக் பதக்க கனவு பறிக்கப்பட்டு விட்டதாக, மல்யுத்த வீரர் நர்சிங் யாதவ் விரக்தி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: தடை குறித்த தீர்ப்பால் நான் சீர்குலைந்து போயுள்ளேன். எனது ஒலிம்பிக் பதக்க கனவு பறிக்கப்பட்டுள்ளது. நான் நிரபராதி என்பதை நிருபிக்க என்னால் முடிந்த முயற்சிகளை செய்வேன் என்றார்.

நரசிங் தடை குறித்து இந்திய ஒலிம்பிக் சங்கம் கூறும்போது, நர்சிங் யாதவ், ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க கூடாது என சதி செய்த சக நாட்டவரால் தான் பாதிக்கப்பட்டார். எதிரிகளால் அவர் பாதிப்படையவில்லை என்று கூறியுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்