ஆப்நகரம்

இந்தியாவுக்கான தங்கத்தை நான் தவறவிட்டது வருத்தமளிக்கிறது – தீபா கர்மாகர்

இந்தியாவுக்கான தங்கத்தை தவறவிட்டது வருத்தமளிக்கிறது என்று ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கர்மாகர் தெரிவித்துள்ளார்.

TNN 15 Aug 2016, 1:39 pm
பெண்களுக்கான ஜிம்னாஸ்டிக் இறுதிப் போட்டியில் தீபா கர்மாகர் 4வது இடம் பிடித்துள்ளார். கடந்த 8ம் தேதி நடந்த ஜிம்னாஸ்டிக் போட்டி வால்ட் பிரிவின் தகுதிச் சுற்றில் இந்தியாவின் தீபா கர்மாகர் 8வது இடம் பிடித்து இறுதிச் சுற்றுக்கு முன்னேற்றினார்.
Samayam Tamil i am very disappointed that i missed out on a medal
இந்தியாவுக்கான தங்கத்தை நான் தவறவிட்டது வருத்தமளிக்கிறது – தீபா கர்மாகர்


இப்போட்டியைத் தொடர்ந்து நேற்று நடந்த இறுதிப் போட்டியில் தீபா கர்மாகர் உள்பட மற்ற நாடுகளைச் சேர்ந்த 8 வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதில் அமெரிக்காவைச் சேர்ந்த சிமோன் பைல்ஸ் 15.966 புள்ளிகளுடன் முதல் இடம் பிடிக்க, இந்தியாவின் தீபா கர்மாகர் 15.066 புள்ளிகளுடன் 4வது இடத்திற்கு தள்ளப்பட்டார்.

இது குறித்து தீபா கர்மாகர் கூறுகையில், இந்த ஒலிம்பிக் போட்டியில் நான் சிறப்பாக செயல்பட்டது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனால், நான் ரொம்பவம் அதிர்ச்சிக்குள்ளானேன். இந்தியாவுக்கான தங்கத்தை நான் 0.900 புள்ளிகளில் நான் தவறவிட்டது என்று கூறியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்