ஆப்நகரம்

ஒலிம்பிக்ஸ்: தொடருது இந்திய வீரர்களின் சோகம் !

ரியோ ஒலிம்பிக்கில் இந்திய வீரர்கள் தொடர்ந்து வெளியேறும் சோகம் தொடர்ந்து அரங்கேறிவருகிறது.

TOI Contributor 13 Aug 2016, 5:50 pm
ரியோ: ரியோ ஒலிம்பிக்கில் இந்திய வீரர்கள் தொடர்ந்து வெளியேறும் சோகம் தொடர்ந்து அரங்கேறிவருகிறது.
Samayam Tamil indias manish singh finishes 13th in mens 20km race walk
ஒலிம்பிக்ஸ்: தொடருது இந்திய வீரர்களின் சோகம் !


பிரேசிலின் ரியோ நகரில் 31வது ஒலிம்பிக் போட்டிகள் நடக்கிறது. இதன் இந்திய துப்பாக்கி சுடுதலின் ஸ்கீட் போட்டியில், இந்திய வீரர் மாய்ராஜ் அஹமது கான் கலந்து கொண்டார்.

முதல் மூன்று சுற்று முடிவில், அஹமது கான் (24,25,23) 72 புள்ளிகள் எடுத்தார். இதையடுத்து இவருக்கு அரையிறுதி வாய்ப்பு பிரகாசமாக இருந்தது. ஆனால் ஒலிம்பிக் சங்க கொடியின் கீழ் பங்கேற்ற குவைத் வீரர் அல் ரசிதி (25,24,25) 74 புள்ளிகள் எடுத்து அரையிறுதிக்கு முன்னேறினார். இதனால் அஹமது கான் வெளியேறும் நிலை ஏற்பட்டது.

மனீஷ் சிங் ஏமாற்றம் :
இதே போல ஆண்கள் 20 கி.மீ., நடைப்போட்டியில், இந்திய வீரர் மனீஷ் சிங், 1 மணி நேரம் 21 நிமிடம் 21 விநாடிகளில் கடந்து 13வது இடம் பிடித்து ஏமாற்றம் அளித்தார்.

குர்பிரீத் சொதப்பல் :
இதே போல ஆண்கள் 25 மீ., ரேபிட் பிஸ்டல் துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்ற குர்பிரீத் சிங், 289 புள்ளிகள் எடுத்து அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்து வெளியேறினார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்