ஒலிம்பிக் ஆடவர் இரட்டையர் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில் போலந்து அணியிடம் இந்திய அணி நேர் செட்களில் தோல்வியை தழுவியது.
ரியோ ஒலிம்பிக் தொடரின் முதல் நாளான இன்று,ஆடவர் இரட்டையர் டென்னிஸ் பிரிவின் முதல் சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன.இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியாவின் லியாண்டர் பயஸ்-போபண்ணா ஜோடி போலந்து அணியை எதிர்கொண்டது.
ஆட்டத்தின் தொடக்கம் முதலே சிறப்பாக ஆடிய ரோமானியாவின் குபோட்,மார்சின் ஜோடி முதல் செட்டை 4-6 என கைப்பற்றியது.அடுத்த சுற்றை எப்படியாவது கைப்பற்றி விட வேண்டும் என இந்திய அணியும் ,இரண்டாவது செட்டையும் கைப்பற்றி நேர் செட்களில் வெற்றி பெற வேண்டும் என போலந்து அணியும் போராடின.இரு அணிகளும் விட்டுக்கொடுக்காமல் ஆடியதால்,ஆட்டம் விறுவிறுப்படைந்தது.
ஆனால் இந்திய அணி செய்த சில தவறுகள் காரணமாக புள்ளிகளை பெற்ற போலந்து அணி இரண்டாவது செட்டை 6-7 என கைப்பற்றி நேர் செட்களில் வெற்றி பெற்றது.இந்த தோல்வியினால் ஆடவர் இரட்டையர் டென்னிஸ் பிரிவில் இந்தியாவின் ஒலிம்பிக் பதக்க கனவு தகர்ந்தது.
ரியோ ஒலிம்பிக் தொடரின் முதல் நாளான இன்று,ஆடவர் இரட்டையர் டென்னிஸ் பிரிவின் முதல் சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன.இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியாவின் லியாண்டர் பயஸ்-போபண்ணா ஜோடி போலந்து அணியை எதிர்கொண்டது.
ஆட்டத்தின் தொடக்கம் முதலே சிறப்பாக ஆடிய ரோமானியாவின் குபோட்,மார்சின் ஜோடி முதல் செட்டை 4-6 என கைப்பற்றியது.அடுத்த சுற்றை எப்படியாவது கைப்பற்றி விட வேண்டும் என இந்திய அணியும் ,இரண்டாவது செட்டையும் கைப்பற்றி நேர் செட்களில் வெற்றி பெற வேண்டும் என போலந்து அணியும் போராடின.இரு அணிகளும் விட்டுக்கொடுக்காமல் ஆடியதால்,ஆட்டம் விறுவிறுப்படைந்தது.
ஆனால் இந்திய அணி செய்த சில தவறுகள் காரணமாக புள்ளிகளை பெற்ற போலந்து அணி இரண்டாவது செட்டை 6-7 என கைப்பற்றி நேர் செட்களில் வெற்றி பெற்றது.இந்த தோல்வியினால் ஆடவர் இரட்டையர் டென்னிஸ் பிரிவில் இந்தியாவின் ஒலிம்பிக் பதக்க கனவு தகர்ந்தது.