ஆப்நகரம்

சிந்துவுக்கு ராஜ்யவர்தன் ரத்தோர் வாழ்த்து

ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப்பதக்கம் கைப்பற்றிய இந்தியாவின் பிவி சிந்துவுக்கு மத்திய அமைச்சர் ராஜ்யவர்தன் ரத்தோர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

TNN 19 Aug 2016, 11:07 pm
ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப்பதக்கம் கைப்பற்றிய இந்தியாவின் பிவி சிந்துவுக்கு மத்திய அமைச்சர் ராஜ்யவர்தன் ரத்தோர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Samayam Tamil many congratulations to pvsindhu and her family
சிந்துவுக்கு ராஜ்யவர்தன் ரத்தோர் வாழ்த்து


இன்று நடந்த பேட்மிண்டன் இறுதிப் போட்டியில் இந்தியாவின் பிவி சிந்து. ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மரினை சந்தித்தார். இதில் முதல் செட்டை 21-19 என்று சிந்து கைப்பற்ற அடுத்த செட்டை கரோலினா மரின் 21-12 என்று கைப்பற்றினார்.

இதனால் வெற்றியை நிர்ணயிக்கும் கடைசி செட்டில் இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இந்த செட்டில் கரோலின் சிந்துவுக்கு அதிக நெருக்கடி கொடுத்து வந்தார். கடைசியில் கரோலின் 21-15 என்று கைப்பற்ற சிந்து தோல்வியடைந்து வெள்ளிப்பதக்கம் வென்றார்.

சிந்துவின் இந்த வெற்றி குறித்து மத்திய அமைச்சர் ராஜ்யவர்தன் ரத்தோர் கூறுகையில்: பேட்மிண்டன் இறுதிப் போட்டியில் போராடி தோல்வியடைந்து இந்தியாவுக்கு வெள்ளிப்பதக்கம் பெற்று தந்துள்ளார். சவால் நிறைந்த இந்தப் போட்டியில் கடுமையாக போராடிய சிந்துவுக்கும், அவரது பெற்றோருக்கும் எனது வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்