ஆப்நகரம்

Tokyo Paralympics 2021: ‘ஈட்டி எறிதல்’...இந்தியாவுக்கு இரட்டை பத்தகம்: வீரர்கள் தொடர்ந்து அசத்தல்!

ஈட்டி எறிதலில் இந்தியாவுக்கு இரண்டு பதக்கங்கள் கிடைத்துள்ளது.

Samayam Tamil 30 Aug 2021, 9:32 am
டோக்கியோ பாராலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவுக்கு இரட்டை பதக்கம் கிடைத்துள்ளது.
Samayam Tamil தேவேந்திர ஜஜாரியா (வலது), சுந்தர் சிங் இடது)


ஈட்டி எறிதலில் இந்தியாவின் தேவேந்திர ஜஜாரியா வெள்ளி பதக்கமும், சுந்தர் சிங் வெண்கல பதக்கமும் வென்றுள்ளார்.

இறுதிச் சுற்றில் தேவேந்திர ஜஜாரியா 64.35 மீட்டர் எறிந்து வெள்ளி வென்றார். இவர் எறிந்த்து 60.28, 60.62,64.35,*,*,61.23 மீட்டர் ஆகும். இதில் மூன்றாவது முறையாக எறிந்த 64.35 மீட்டர்தான் ஜஜாரியாவுக்கு கைகொடுத்துள்ளது.

அதேபோல், சுந்தர் சிங் 64.01 மீட்டர் எறிந்து வெண்கலம் வென்றார். இவர் எறிந்தது 62.26, 60.20, *, *, 64.01, *. இதில் மூன்று பௌல் செய்திருக்கிறார். ஐந்தாவது முறை எறிந்த 64.01 மீட்டர்தான் இவருக்கு கை கொடுத்துள்ளது. முதலிடத்தை இலங்கையைச் சேர்ந்த தினேஷ் பிரியன் பிடித்து தங்கம் வென்றார். இவர் எறிந்தது 67.79 மீட்டர்கள் ஆகும்.

இன்று காலை, மகளிர் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் அவனி லெகரா தங்கம் வென்றிருந்தார். அதன்பிறகு தற்போது ஏட்டி எறிதலில் இந்தாவுக்கு இரட்டை பதக்கம் கிடைத்துள்ளது. தற்போதுவரை இந்தியா ஒரு தங்கம், 4 வெள்ளி, இரண்டு வெண்கலம் என மொத்தம் 7 பத்தங்களை வென்று 34ஆவது இடத்தில் இருக்கிறது. சீனா 47 தங்கம் உட்பட 106 பதக்கங்ளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது. இங்கிலாந்து 24 தங்கம் உட்பட 62 பதக்கங்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்