ஆப்நகரம்

இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் உறுதி…குத்துச் சண்டையில் இந்திய வீராங்கனை அசத்தல்!

குத்துச் சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை லவ்லினா அரையிறுதிக்கு முன்னேறினார்

Samayam Tamil 30 Jul 2021, 10:13 am
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் மீராபாய் சானு வென்ற வெள்ளிப் பதக்கத்திற்குப் பிறகு, யாரும் பதக்கம் வெல்லாமல் இருந்து வந்தனர். இந்நிலையில், குத்துச் சண்டை பிரிவு போட்டியில் வீராங்கனை லவ்லினா போர்கோஹெய்ன் இந்தியாவுக்கு 2வது பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.
Samayam Tamil லவ்லினா


இன்று நடைபெற்ற மகளிர் குத்துச் சண்டை 69 கிலோ எடைப் பிரிவு, காலிறுதிப் போட்டியில் முன்னாள் சாம்பியன் சீனா தைபே வீராங்கனை சின்-நியென் சென் மற்றும் இந்தியாவின் லவ்லினா ஆகியோர் மோதினர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் முன்னாள் சாம்பியன் சின்-நியெனை 4-1 என்ற கணக்கில் லவ்லினா வீழ்த்தி அசத்தினார். இதன்மூலம், அவர் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறி, பதக்கம் வெல்லும் வாய்ப்பை உறுதிப்படுத்தியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்