ஆப்நகரம்

ஒலிம்பிக்ஸ்: ஜோகோவிச்சுக்கு அடுத்த அடி !

ஒலிம்பிக் ஆண்கள் இரட்டையர் பிரிவில் டென்னிஸில் ஜோகோவிச்சின் செர்பிய அணி தோல்வியடைந்து வெளியேறியது.

TOI Contributor 9 Aug 2016, 11:07 am
ரியோ: ஒலிம்பிக் ஆண்கள் இரட்டையர் பிரிவில் டென்னிஸில் ஜோகோவிச்சின் செர்பிய அணி தோல்வியடைந்து வெளியேறியது.
Samayam Tamil novak djokovic out again
ஒலிம்பிக்ஸ்: ஜோகோவிச்சுக்கு அடுத்த அடி !


பிரேசிலின் ரியோ நகரில் 31வது ஒலிம்பிக் போட்டிகள் நடக்கிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு டென்னிஸ் தொடரில் உலகின் ‘நம்பர்-1’ வீரரான செர்பியாவின் நோவாக் ஜோகோவிச், அர்ஜெண்டினாவின் மார்டின் டெல் பெட்ரோவிடம் அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறினார்.

தற்போது நடந்த ஆண்கள் இரட்டையர் பிரிவு டென்னிஸ் தொடரின், இரண்டாவது சுற்றில் செர்பியாவின் ஜோகோவிச், நெனாத் ஜிமான்ஜிக் ஜோடி, பிரேசிலின் மார்செலோ மெலோ, புருனோ சோரெஸ் ஜோடியை எதிர்கொண்டது.

இதில் துவக்கம் முதல் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோகோவிச் ஜோடி, முதல் செட்டை 4-6 என இழந்தது. தொடர்ந்து நடந்த இரண்டாவது செட்டிலும் தடுமாறிய ஜோகோவிச் ஜோடி, 4-6 என இழந்தது.

முடிவில், செர்பியாவின் ஜோகோவிச், நெனாத் ஜிமான்ஜிக் ஜோடி, பிரேசிலின் மார்செலோ மெலோ, புருனோ சோரெஸ் ஜோடியிடம் 4-6, 4-6 என்ற செட்களில் தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறியது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்