ஆப்நகரம்

டோக்கியோ வந்தடைந்தது ஒலிம்பிக் கொடி!

ரியோவில் இருந்து பெறப்பட்ட ஒலிம்பிக் கொடி டோக்கியோ நகர் வந்தடைந்தது.

TOI Sports 24 Aug 2016, 3:32 pm
டோக்கியோ: ரியோவில் இருந்து பெறப்பட்ட ஒலிம்பிக் கொடி டோக்கியோ நகர் வந்தடைந்தது.
Samayam Tamil olympic flag arrives in tokyo host city of 2020 olympics
டோக்கியோ வந்தடைந்தது ஒலிம்பிக் கொடி!


பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் 31வது ஒலிம்பிக் போட்டிகள் சிறப்பாக நடந்தது. இதன் பின் நடந்த நிறைவு விழாவில் ஒலிம்பிக் கொடி ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் டோக்கியோ கமிட்டியிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த கொடியை டோக்கியோ கவர்னர் யுரிக்கோ கோயிகி இன்று ஜப்பான் தலைநகருக்கு எடுத்துவந்தார். இந்தக்கொடி மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டிகள் முடிந்து அதன் கொடி வரும் வரை ஜப்பான் தலைமையகத்தில் பத்திரமாக வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பானில் கடந்த 1964க்கு பின் தற்போது ஒலிம்பிக் போட்டிகள் இரண்டாவது முறையாக நடக்கவுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்