ஆப்நகரம்

வாழ்க்கையில் எதுவும் நிரந்தரமல்ல !

வாழ்க்கையில் எதுவும் நிரந்தரமல்ல எப்போ எது நடக்கும் என்று தெரியாது என மின்னல் மனிதன் உசைன் போல்ட் தெரிவித்துள்ளார்.

TOI Contributor 9 Aug 2016, 10:24 am
ரியோ: வாழ்க்கையில் எதுவும் நிரந்தரமல்ல எப்போ எது நடக்கும் என்று தெரியாது என மின்னல் மனிதன் உசைன் போல்ட் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil rio olympics athletics on right track says relaxed usain bolt
வாழ்க்கையில் எதுவும் நிரந்தரமல்ல !


பிரேசிலின் ரியோ நகரில் 31வது ஒலிம்பிக் போட்டிகள் நடக்கிறது. இதில் ஜமைக்காவில் மின்னல் மனிதன் உசைன் போல்ட், ஒலிம்பிக்கில் ஹாட்ரிக் தங்கம் வென்று புதிய வரலாறு படைப்பதாக தெரிவித்துள்ளார். இதற்காக ஆவலுடன் இருப்பதாக காத்திருப்பதாக போல்ட் கூறியுள்ளார்.

இதுகுறித்து உசைன் போல்ட் கூறியது:
இதுதான் நான் பங்கேற்கும் கடைசி ஒலிம்பிக் போட்டிகள் என்பது உறுதி. தடகளத்தில் நான் தான் சிறந்தவன் என்பதை பல முறை நிரூபித்துவிட்டேன். இனிமேல் புதிதாக நிரூபிக்க ஒன்றும் இல்லை. என்னுடைய கடைசி ஒலிம்பிக் போட்டி என்பதால் அதை வெற்றிகரமாக முடிக்க ஆசைப்படுகிறேன். வாழ்க்கையில் எதுவும் நிரந்தரமானது அல்ல. அதனால் வெற்றிக்கு நான் எப்படி உறுதியளிக்க முடியும். நான் போட்டியில் மற்ற வீரர்களைப்போல பங்கேற்பேன்.
இவ்வாறு போல்ட் கூறினார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்