ஆப்நகரம்

பேரன் பதக்கம் வென்றதை கொண்டாடிய பாட்டி மரணம்!

பேங்காக் : பளுதூக்குதல் போட்டியில் பேரன் பதக்கம் வென்றதை கொண்டாடிய அவரது பாட்டி இதய கோளாறால் இறந்த சம்பவம் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

TNN 9 Aug 2016, 4:53 am
பேங்காக் : பளுதூக்குதல் போட்டியில் பேரன் பதக்கம் வென்றதை கொண்டாடிய அவரது பாட்டி இதய கோளாறால் இறந்த சம்பவம் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
Samayam Tamil rio olympics thai medalists grandmother dies celebrating win
பேரன் பதக்கம் வென்றதை கொண்டாடிய பாட்டி மரணம்!


ஒலிம்பிக் பளுதூக்குதல் போட்டியில் தாய்லாந்தை சேர்ந்த 20 வயதான சினிபட் குராய்தங் 56 கிலோ எடை பிரிவில் கலந்து கொண்டு வெண்கலப் பதக்கத்தை வென்று அசத்தினார். சினிபட் பங்கேற்ற போட்டியை பேங்காக்கில் ரசிகர்கள் கூட்டத்தோடு அவரது பாட்டி சுபின் காங்தாப் ப்ரொஜெக்டர் மூலம் நேரடி ஒளிபரப்பை கண்டு ரசித்துக் கொண்டிருந்தார்.

முதலில் சினிபட் சற்று பிந்தங்கி இருந்தார். அப்போது அவரின் பாட்டி பேரனை பார்த்து வெற்றி உன்னுடையது என்பது போல் ஆர்பரித்துக் கொண்டிருந்தார். கடைசியில் சினிபட் போட்டியில் வெண்கலம் வென்று அசத்தினார்.

பேரனின் வெற்றியை பார்த்து ஆனந்தத்தில் துள்ளி குதித்த பாட்டி திடீரென சுருண்டு விழுந்தார். பதறிப்போன மற்றவர்கள் பாட்டியை மருத்துவமனையில் அனுமதித்தனர். இருப்பினும் அவர் இதயக்கோளாறால் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

முன்னதாக தாய்லாந்தை சேர்ந்த சோபிட தனாசன் (21), பெண்கள் பிரிவில் தங்கப் பதக்கத்தை வென்றிருந்தார் இதனால் அந்நாட்டினரால் சினிபட் மேல் எதிர்பார்ப்பு அதிர்கரித்ததாக கூறப்படுகிறாது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்