ஆப்நகரம்

ஒலிம்பிக்கை நடத்த தயாரான ரியோ நகரம் !

ஒலிம்பிக் போட்டிக்கான பாதுகாப்புக்காக ரியோ நகரில் சுமார் 33 சதவீத போலீசார் கூடுதலாக ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

TNN 3 Aug 2016, 5:30 am
ரியோ: ஒலிம்பிக் போட்டிக்கான பாதுகாப்புக்காக ரியோ நகரில் சுமார் 33 சதவீத போலீசார் கூடுதலாக ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
Samayam Tamil rio to boost police force during olympics
ஒலிம்பிக்கை நடத்த தயாரான ரியோ நகரம் !


பிரேசிலின் ரியோ நகரில் வரும் 5 முதல் ஒலிம்பிக் போட்டிகள் நடக்கவுள்ளது. இங்கு முதலில் சுமார் 10,400 போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் தற்போது 13,900 போலீசார் இப்பணியில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதில் 1,300 போலீசார் ஒலிம்பிக் போட்டிகள் நடக்கும் மைதானங்கள், கிராமங்களில் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள் எனவும். மற்ற அதிகாரிகள் செக்பாயிண்ட்கள், சேரிகள், காவல் நிலையங்கள், நகரம் உள்ளிட்ட இடங்களில் பணியில் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரேசிலில் ஒலிம்பிக் போட்டிகளுக்காக 22,000 ராணுவ வீரர்கள் உட்பட 55,000 பேர் பாதுகாப்பு பணியில் உள்ளனர் என ஒலிம்பிக் சங்கம் தெரிவித்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்