ஆப்நகரம்

ஜாம்பவான்கள் பட்டியலில் நானா !

சச்சின், லியாண்டர் பயஸ் போன்ற ஜாம்பவான்கள் பட்டியலில் இணைவேன் என கனவில் கூட நினைக்கவில்லை என இந்திய மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷி மாலிக் கூறியுள்ளார்.

TOI Sports 21 Aug 2016, 3:52 pm
புதுடில்லி: சச்சின், லியாண்டர் பயஸ் போன்ற ஜாம்பவான்கள் பட்டியலில் இணைவேன் என கனவில் கூட நினைக்கவில்லை என இந்திய மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷி மாலிக் கூறியுள்ளார்.
Samayam Tamil sakshi malik recommended for khel ratna
ஜாம்பவான்கள் பட்டியலில் நானா !


பிரேசிலின் ரியோ நகரில் நடந்த 31வது ஒலிம்பிக் போட்டிகள் நடக்கிறது. இதன் பெண்கள் மல்யுத்தத்தில், இந்திய வீராங்கனை சாக்‌ஷி மாலிக், வெண்கலப்பதக்கம் வென்றார். இதையடுத்து இவரது பெயர் கேல் ரத்னா விருதுக்கும், இவரது பயிற்சியாளர் குலதீப் சிங்கின் பெயர் துரோனாச்சாரியா விருதுக்கும் பரிந்துரை செய்யப்படவுள்ளது.

இதுகுறித்து சாக்‌ஷி மாலிக் கூறியது:
கேல் ரத்னா விருதுக்கு எனது பெயர் பரிந்துரைப்படும் விஷயம் கேட்டவுடன் அதிர்ச்சி கலந்த ஆச்சரியமாக இருந்தது. என்னுடைய சாதனைக்கு அர்ஜூனா விருது தான் கிடைக்கும் என எதிர்பார்த்தேன். ஆனால் நேரடியாக இந்த விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது அருமையான செய்தி தான். சச்சின், லியாண்டர் பயஸ் உள்ளிட்ட ஜா ம்பவான்களுக்கு இந்த விருது கிடைத்த போது நான் குழந்தையாக இருந்தேன். தற்போது நானும் அவர்கள் இடத்தில் இருந்து நாட்டுக்கு பெருமை சேர்ப்பதை நினைக்கும் போது பெருமையாக உள்ளது.
இவ்வாறு சாக்‌ஷி மாலிக் கூறினார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்