இந்திய மல்யுத்த வீராங்கனையான சாக்ஷி மாலிக் ஆண்டிற்கு இருமுறை உலகின் எந்த பகுதிக்கு வேண்டுமானாலும் இலவசமாக விமானப் பயணம் மேற்கொள்ளலாம் என ஏர் இந்தியா நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஒலிம்பிக் மல்யுத்த போட்டிகளில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனையான சாக்ஷி மாலிக்கிற்கு நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து வாழ்த்துகள் குவிந்து வருவது மட்டுமின்றி,பல்வேறு பரிசுகளும்,சலுகைகளும் அளிக்கப்பட்டு வருகின்றன.
ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றதற்காக ஹரியானா அரசு சாக்ஷிக்கு 2.5 கோடி ரூபாய் பரிசுத்தொகை அறிவித்திருப்பது மட்டுமின்றி,அவருக்கு அரசு வேலையும் அளித்துள்ளது.இந்நிலையில் ஏர் இந்தியா விமான சேவை நிறுவனம் தன் பங்கிற்கு சாக்ஷிக்கு புதிய சலுகையை அறிவித்துள்ளது.
இனி ஆண்டிற்கு இருமுறை,உலகின் எந்த பகுதியிலிருந்தும் மற்றொரு பகுதிக்கு இரண்டு முறை இலவசமாக பயணம் செய்யலாம் என சாக்ஷிக்கு ஏர் இந்தியா நிறுவனம் சலுகை அளித்துள்ளது.இந்த பயணத்தின் போது சாக்ஷி தன்னோடு மற்றொருவரையும் அழைத்துச் செல்லலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கான சலுகை கடிதமும் சாக்ஷிக்கு அனுப்பியுள்ளது ஏர் இந்தியா நிர்வாகம்.
ஒலிம்பிக் மல்யுத்த போட்டிகளில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனையான சாக்ஷி மாலிக்கிற்கு நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து வாழ்த்துகள் குவிந்து வருவது மட்டுமின்றி,பல்வேறு பரிசுகளும்,சலுகைகளும் அளிக்கப்பட்டு வருகின்றன.
ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றதற்காக ஹரியானா அரசு சாக்ஷிக்கு 2.5 கோடி ரூபாய் பரிசுத்தொகை அறிவித்திருப்பது மட்டுமின்றி,அவருக்கு அரசு வேலையும் அளித்துள்ளது.இந்நிலையில் ஏர் இந்தியா விமான சேவை நிறுவனம் தன் பங்கிற்கு சாக்ஷிக்கு புதிய சலுகையை அறிவித்துள்ளது.
இனி ஆண்டிற்கு இருமுறை,உலகின் எந்த பகுதியிலிருந்தும் மற்றொரு பகுதிக்கு இரண்டு முறை இலவசமாக பயணம் செய்யலாம் என சாக்ஷிக்கு ஏர் இந்தியா நிறுவனம் சலுகை அளித்துள்ளது.இந்த பயணத்தின் போது சாக்ஷி தன்னோடு மற்றொருவரையும் அழைத்துச் செல்லலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கான சலுகை கடிதமும் சாக்ஷிக்கு அனுப்பியுள்ளது ஏர் இந்தியா நிர்வாகம்.