ஆப்நகரம்

எனக்கு பயிற்சியாளர் கிடைக்கவில்லை: கோபிசந்தின் மனைவி லட்சுமி

சிந்துவிற்கு மற்றும் சாய்னா நேவாலுக்கு கிடைத்தது போல் எனக்கும் பயிற்சியாளர் கிடைத்திருந்தால் நானும் சாதித்திருப்பேன் என்று கூறியுள்ளார்.

TOI Contributor 22 Aug 2016, 7:48 pm
ரியோ ஒலிம்பிக்கில் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பிவி சிந்து வெள்ளிப்பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார். இவருக்கு பயிற்சியாளராக இருந்த கோபிசந்த், விளையாட்டுக்காக கடுமையாக உழைத்துள்ளார் என்று அவரது மனைவி பிவிவி லட்சுமி தெரிவித்துள்ளார்.
Samayam Tamil sindhu has a coach i didnt have my husband
எனக்கு பயிற்சியாளர் கிடைக்கவில்லை: கோபிசந்தின் மனைவி லட்சுமி


பேட்மிண்டன் வீராங்கனை சிந்து மட்டுமில்லாமல், கடந்த 2012ம் ஆண்டு லண்டனில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் சாய்னா நேவால் வெண்கலப் பதக்கம் வென்றார். இவரும், கோபிசந்தின் பயிற்சியின் கீழ் பயிற்சி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், கோபிசந்தின் மனைவியான லட்சுமியும் பேட்மிண்டன் வீராங்கனை என்பது யாரும் அறிந்திராத ஒன்று. கடந்த 1996ம் ஆண்டு அட்லாண்டா ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்காக விளையாடியுள்ளார்.

அதன் பிறகு 6 ஆண்டுகள் கழித்து கோபிசந்தை திருமணம் செய்து கொண்டார். பேட்மிண்டன் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற லட்சுமி ஹைதராபாத்தில் கோபிசந்த் நடத்திவரும் பேட்மிண்டன் பயிற்சி அகாடமியில் அவருக்கு உதவியாக இருந்து வருகிறார். இவருடைய மகள் காயத்ரி, யு-13 தேசிய பேட்மிண்டன் போட்டியில் சாம்பியன். மகன் விஷ்ணுவும் தந்தையின் பேட்மிண்டன் அகாடமியில் பயிற்சி பெற்று வருகிறார்.

இந்நிலையில் கோபிசந்த் குறித்து பேசிய லட்சுமி, விளையாட்டுக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டவர். இந்திய வீரர்கள் பேட்மிண்டன் போட்டியில் உலகளவில் சாதனை படைக்க வேண்டும் என்று ஆர்வம் கொண்டவர் என்று கூறியுள்ளார். சிந்துவுக்கும், சாய்னாவுக்கும் கிடைத்த பயிற்சியாளர் போல் எனக்கும் கிடைத்திருந்தால் நானும் சாதித்திருப்பேன். எனக்கு அப்போது சிறந்த பயிற்சியாளர் கிடைக்கவில்லை என்று ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்