ஆப்நகரம்

என்னுடைய மகள் நாளை கண்டிப்பாக வெற்றி பெறுவார் - சிந்துவின் தந்தை பேரானந்தம்

''இறுதிப் போட்டிக்குள் எங்களது மகள் சிந்து நுழைந்தது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. நாளை உறுதியாக அவர் வெற்றி பெறுவார்'' என்று சிந்துவின் தந்தை மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

TNN 18 Aug 2016, 9:57 pm
ரியோ: ''இறுதிப் போட்டிக்குள் எங்களது மகள் சிந்து நுழைந்தது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. நாளை உறுதியாக அவர் வெற்றி பெறுவார்'' என்று சிந்துவின் தந்தை மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
Samayam Tamil sindhu will win in the finals sure says her father
என்னுடைய மகள் நாளை கண்டிப்பாக வெற்றி பெறுவார் - சிந்துவின் தந்தை பேரானந்தம்


ஒலிம்பிக் பெண்கள் பேட்மிண்டன் ஒற்றையர் அரை இறுதிப் போட்டியில் ஜப்பான் வீராங்கனை நோசோமி ஒகுஹராவை எளிதாக இந்தியாவின் பி.வி. சிந்து தோற்கடித்து இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார். ஜப்பான் வீராங்கனையை 21-19, 21-10 என்ற நேர் செட் புள்ளிகளில் தோற்கடித்தார்.

ஐதராபாத்தில் உள்ள புல்லேலா கோபிசந்த் அகாடமியில் இந்த விளையாட்டை பார்த்துக் கொண்டு இருந்த சிந்துவின் பெற்றோர் சிந்துவின் வெற்றியை அடுத்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

சிந்துவின் தந்தை கூறுகையில், ''விளையாட்டு துவக்கத்தில் கடினமாக டென்ஷனாக இருந்தது. அதற்குப் பின்னர் சிந்து முன்னேறிச் சென்று கொண்டே இருந்தார். 15-10 என்ற புள்ளிகளில் இருந்தபோது எங்களுக்கு சிந்து வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. கோபிசந்தும், சிந்துவும் கடினமாக் உழைத்தார்கள். இந்த வெற்றி நாளை சிந்து உறுதியாக வெற்றி பெறுவார் என்று நம்பிக்கையை அளித்துள்ளது. நாங்கள் மகிழ்ச்சியாக உள்ளோம், நாங்கள் மகிழ்ச்சியாக உள்ளோம்'' என்று ஆரவாரத்துடன் கூறினார். அங்கு கூடியிருந்தவர்கள் சிந்துவின் பெற்றோருக்கு கை கொடுத்து தங்களது மகிச்சியை வெளிப்படுத்தினர்.
First set was a bit tense, it was going head to head: PV Sindhu's father #Rio2016 pic.twitter.com/iwwEE4ydII— ANI (@ANI_news) August 18, 2016
We have been going to the temple everyday and even tomorrow we will.She will win by god's grace:PV Sindhu's mother pic.twitter.com/tg8nl0r44V— ANI (@ANI_news) August 18, 2016
சிந்துவின் வெற்றிக்காக நாங்கள் தினமும் கோவிலுக்கு சென்று கொண்டு இருந்தோம் என்று அவரது தாய் தெரிவித்தார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்